SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்

Nov 18, 2025,09:13 PM IST

சென்னை: தமிழ்நாடு வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) உறுப்பினர்கள், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிக வேலைப்பளு, போதிய ஆட்கள் இல்லாதது, போதுமான பயிற்சி அளிக்கப்படாதது போன்ற காரணங்களால் இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.


செவ்வாய்க்கிழமை முதல் இந்த வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இந்த வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக, திங்கட்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்கள் அளித்தனர். மேலும், தாலுகா மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். "இன்று முதல் SIR தொடர்பான எந்த வேலையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்," என்று FERA மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.பி. முருகையன் தெரிவித்தார். இருப்பினும், வழக்கமான வருவாய் துறை பணிகள் பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார். SIR பணிகள் அவசரமாக செயல்படுத்தப்படுவதாகவும், இதனால் களப்பணியாளர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.




முருகையன் மேலும் கூறுகையில், வருவாய் ஊழியர்கள் தினமும் இரவு 1 மணி வரை வேலை செய்ய வேண்டியுள்ளது. சுமார் 6.25 கோடி வாக்காளர்களின் 100% சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்றும், இது எளிதான காரியம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். மாவட்ட ஆட்சியர்கள் நள்ளிரவு வரை ஆய்வு கூட்டங்களை நடத்துவதாகவும், ஒரு நாளைக்கு மூன்று வீடியோ கான்பரன்ஸ்களை நடத்துவதாகவும் அவர் கூறினார். இது ஊழியர்களின் பணிச்சுமையை மேலும் அதிகரிக்கிறது.


இந்த திருத்தப் பணிகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளுக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளாக (BLOs) கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும், மற்றும் BLO மட்டத்தில் போதுமான ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதே சங்கத்தின் கோரிக்கையாகும்.


மேலும், இந்த SIR பணிகளை முடிக்க தேர்தல் ஆணையத்திடம் இருந்து கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. படிவங்களை விநியோகித்தல், சேகரித்தல், ஆன்லைனில் பதிவேற்றுதல் மற்றும் பல ஆய்வுகளில் பங்கேற்பது போன்ற பணிகளை டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் முடிக்க முடியாது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். SIR பணிகளை முடிக்க குறைந்தது ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என FERA கோரியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்

news

Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

Tamil Poem: மாயவலை

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்