சென்னை: முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தலா 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவாகாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் சென்னையில் முதற்கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை என மொத்தம் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்களை இயக்கி வருகின்றது. இதில் தினமும் மூன்று லட்சம் முதல் 3.5 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இரு மார்க்கத்திலும் 4 முதல் 5 வரை ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆறு பெட்டிகள் கொண்ட ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பியது. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் ஆவணத்தினை 2023 ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு ரூபாய் 2,820 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஜூன் மாதம் நிதி ஆயோக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
இரு மார்க்கத்திலும் 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை தயார் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத்தை ஒப்புதல் அளித்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிக் கடன் உதவியுடன் இந்த ரயில் பெட்டிகள் வாங்கப்படவுள்ளன.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}