சென்னை மெட்ரோவுக்கு.. 28 புதிய ரயில்களை கொள்முதல் செய்ய .. ஓகே சொன்ன மத்திய அரசு!

Aug 10, 2024,05:13 PM IST

சென்னை: முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக  தலா 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவாகாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் சென்னையில் முதற்கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை என மொத்தம் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்களை இயக்கி வருகின்றது. இதில் தினமும் மூன்று லட்சம் முதல் 3.5 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். 




நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இரு மார்க்கத்திலும் 4 முதல் 5 வரை ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆறு பெட்டிகள் கொண்ட ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 


இத்திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பியது. இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் ஆவணத்தினை 2023 ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு ரூபாய் 2,820 கோடி மதிப்பில்  6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஜூன் மாதம் நிதி ஆயோக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.


இரு மார்க்கத்திலும் 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை தயார் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத்தை ஒப்புதல் அளித்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிக் கடன் உதவியுடன் இந்த ரயில் பெட்டிகள் வாங்கப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்