சென்னை: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்அளது.
கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் வெப்பம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை நேரங்களில் கருமேகம் சூழ்ந்து குளிர்ச்சி நிலவி வந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று நீலகிரி, கோவை ,தேனி ,திருப்பூர் ,திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ளது. சென்னையில் காலை முதல் வெயில் வெளுத்து வந்தது. ஆனால் பிற்பகலுக்கு மேல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. மாலைக்கு மேல் மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
எப்போது வட கிழக்குப் பருவ மழை
இதற்கிடையே, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மேற்கு பருவ மழை மெல்ல மெல்ல விடை பெறப் போவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், வட கிழக்குப் பருவ மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் 3 வாரத்துக்கு மேல்தான் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மழைதான் தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் மழையைக் கொண்டு வந்து தரும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் காத்துக் கிடக்கின்றன.
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}