சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணப் பலன் பெறும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2025-2026ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை இன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், இறுதியாக அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டார். அதில் மிக முக்கியமான தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புகளை சரண் செய்து, பணப் பலன் பெறும் முறை நிறுத்தப்பட்டது. இந்த முறை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ஈட்டிய விடுப்பு சரண் தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. இதை பரிசீலித்து முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணம் பெறும் பலன் மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த முறை 2026ம் ஆண்டு ஏப்ரல் 01ம் தேதி முதல் சரண் செய்து பணப் பலன் பெற்றுக் கொள்ளும் முறை செயல்படுத்தப்படும். இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும். இதனால் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் அதில் ஒரு கோரிக்கையை தற்போது அரசு ஏற்றுள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}