அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஈட்டிய விடுப்பு சரண் முறை மீண்டும் அமல்!

Mar 14, 2025,05:26 PM IST

சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணப் பலன் பெறும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


2025-2026ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை இன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், இறுதியாக அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டார். அதில் மிக முக்கியமான தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




அதாவது, கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புகளை சரண் செய்து, பணப் பலன் பெறும் முறை நிறுத்தப்பட்டது. இந்த முறை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ஈட்டிய விடுப்பு சரண் தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. இதை பரிசீலித்து முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணம் பெறும் பலன் மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது.


இந்த முறை 2026ம் ஆண்டு ஏப்ரல் 01ம் தேதி முதல் சரண் செய்து பணப் பலன் பெற்றுக் கொள்ளும் முறை செயல்படுத்தப்படும். இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும். இதனால் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் அதில் ஒரு கோரிக்கையை தற்போது அரசு ஏற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

news

முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!

news

டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு

news

அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!

news

நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி

news

கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?

news

சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்

news

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

அதிகம் பார்க்கும் செய்திகள்