சென்னை: சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்த முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்கான நிலுவை நிதியை விடுவிக்க வலியுறுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.
திமுக சார்பில் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி பவள விழா கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக திமுக தொண்டர்களின் அழைப்பு கடிதத்தில், தான் செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தமிழ்நாட்டின் நிதியைக் கேட்டு பெற இரண்டு நாட்கள் பிரதமரை சந்திக்க டெல்லி செல்ல இருக்கிறேன் எனக் கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி தொடர்பாக விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் இரவு டெல்லி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் எம்பி டிஆர் பாலு, ஏ கே எஸ் விஜயன் உள்ளிட்டோர் முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அப்போது பள்ளிக்கல்வி திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும், இரண்டாம் கட்ட மெட்ரோவுக்கான நிலுவையில் உள்ள நிதியை விடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்த இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}