இன்று பிரதமருடன் தமிழக முதல்வர் சந்திப்பு...இதற்கு தான் டில்லி பயணமா?

Sep 27, 2024,10:24 AM IST

சென்னை:   சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்த முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டிற்கான நிலுவை நிதியை விடுவிக்க வலியுறுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.


திமுக சார்பில் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில்  வரும் செப்டம்பர் 28ஆம் தேதி பவள விழா கொண்டாடப்பட உள்ளது.




இதற்காக திமுக தொண்டர்களின் அழைப்பு கடிதத்தில், தான் செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தமிழ்நாட்டின் நிதியைக் கேட்டு பெற இரண்டு நாட்கள் பிரதமரை சந்திக்க டெல்லி செல்ல இருக்கிறேன் எனக் கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி தொடர்பாக விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் இரவு டெல்லி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் எம்பி டிஆர் பாலு, ஏ கே எஸ் விஜயன் உள்ளிட்டோர் முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்றனர்.


இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அப்போது பள்ளிக்கல்வி  திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும், இரண்டாம் கட்ட மெட்ரோவுக்கான நிலுவையில் உள்ள நிதியை விடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்த இருக்கிறார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்