விறுவிறு என்று உச்சம் தொட்ட பூண்டு விலை.. ஒரு கிலோ ரூ.450க்கு விற்பனை

Aug 26, 2024,04:33 PM IST

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு ரூ.450க்கு விற்ப்படுகிறது.


சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக பூண்டு உள்ளது.இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவை குறைத்தல், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களில் இருந்து நம்மை காக்கும் தன்மை பூண்டிற்கு உண்டு. இத்தகைய பூண்டு  கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. 




தமிழகத்தை பொருத்த வரை காய்கறிகளின் விலை பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு வரும் பூண்டின் விலையும் உயர்ந்துள்ளது.


வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் விலைச்சல் குறைவு காரணமாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு 100 டன் அளவிற்கு வரும் பூண்டு தற்போது 20 டன் அளவிற்கு மட்டுமே வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பூண்டிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 


வரத்து குறைந்த காரணத்தினால் பூண்டின் விலை கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ பூண்டு தற்போது 450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரியில் விளைச்சல் செய்யப்படும் பூண்டின் விலையும் அதிகரித்து ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இந்த பூண்டின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்