சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு ரூ.450க்கு விற்ப்படுகிறது.
சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக பூண்டு உள்ளது.இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவை குறைத்தல், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களில் இருந்து நம்மை காக்கும் தன்மை பூண்டிற்கு உண்டு. இத்தகைய பூண்டு கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தை பொருத்த வரை காய்கறிகளின் விலை பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு வரும் பூண்டின் விலையும் உயர்ந்துள்ளது.
வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் விலைச்சல் குறைவு காரணமாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு 100 டன் அளவிற்கு வரும் பூண்டு தற்போது 20 டன் அளவிற்கு மட்டுமே வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பூண்டிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வரத்து குறைந்த காரணத்தினால் பூண்டின் விலை கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ பூண்டு தற்போது 450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரியில் விளைச்சல் செய்யப்படும் பூண்டின் விலையும் அதிகரித்து ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இந்த பூண்டின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK-விலிருந்து அஸ்வின் வெளியேறப் போகிறாரா.. சஞ்சு சாம்சன் உள்ளே நுழையப் போகிறாரா?
தேமுதிகவில் என்ன நடக்கிறது?.. பிரேமலதாவுடன் கே.சி. வீரமணி சந்தித்தது எதற்காக??
தானே முதல்வர் வேட்பாளர்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் புரட்சி படைப்பார்.. இந்தியா டுடே தகவல்!
ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?
தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?
BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்
டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்
ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?
{{comments.comment}}