சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு ரூ.450க்கு விற்ப்படுகிறது.
சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக பூண்டு உள்ளது.இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவை குறைத்தல், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களில் இருந்து நம்மை காக்கும் தன்மை பூண்டிற்கு உண்டு. இத்தகைய பூண்டு கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தை பொருத்த வரை காய்கறிகளின் விலை பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு வரும் பூண்டின் விலையும் உயர்ந்துள்ளது.
வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் விலைச்சல் குறைவு காரணமாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு 100 டன் அளவிற்கு வரும் பூண்டு தற்போது 20 டன் அளவிற்கு மட்டுமே வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பூண்டிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வரத்து குறைந்த காரணத்தினால் பூண்டின் விலை கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ பூண்டு தற்போது 450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரியில் விளைச்சல் செய்யப்படும் பூண்டின் விலையும் அதிகரித்து ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இந்த பூண்டின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
கொல்கத்தாவை உலுக்கி எடுத்த கன மழை.. 3 பேர் பலி.. ரயில் சேவைகளும் பாதிப்பு
பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் மகள் மீண்டும் களத்தில் குதிக்கிறாரா?
நவராத்திரி 2ம் நாள் வழிபாடு .. இன்று என்ன கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்!
நவராத்திரி திருவிழா.. பராசக்திக்கான 9 நாட்கள்.. ஆடுவது சக்தி.. ஆட்டுவித்து ரசிப்பது சிவம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 23, 2025... இன்று எண்ணங்கள் ஈடேறும் நாள்
தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!
விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்
{{comments.comment}}