சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு ரூ.450க்கு விற்ப்படுகிறது.
சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக பூண்டு உள்ளது.இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவை குறைத்தல், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களில் இருந்து நம்மை காக்கும் தன்மை பூண்டிற்கு உண்டு. இத்தகைய பூண்டு கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

தமிழகத்தை பொருத்த வரை காய்கறிகளின் விலை பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு வரும் பூண்டின் விலையும் உயர்ந்துள்ளது.
வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் விலைச்சல் குறைவு காரணமாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இருந்து ஓமலூர் சந்தைக்கு 100 டன் அளவிற்கு வரும் பூண்டு தற்போது 20 டன் அளவிற்கு மட்டுமே வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பூண்டிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வரத்து குறைந்த காரணத்தினால் பூண்டின் விலை கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ பூண்டு தற்போது 450க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரியில் விளைச்சல் செய்யப்படும் பூண்டின் விலையும் அதிகரித்து ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இந்த பூண்டின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்
JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்
N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?
'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?
கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!
சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்
Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!
ஆசையில பாத்திகட்டி!
{{comments.comment}}