ரியாத் : தமிழகத்தின் முதுகுளத்தூரை சேர்ந்த மாணவி, சவுதி அரேபியாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் 96.9 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் இரண்டு மொழிப் பாடங்களில் முதல் இடம் பிடித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த மாணவி சகிகா ரூகி. இவர் தற்போது சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமைந்துள்ள அல் யாஸ்மீன் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் இங்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இவர் பத்தாம் இறுதி தேர்வில் சிறந்து விளங்கி, 500க்கு 483 மதிப்பெண்கள் (96.9%) பெற்று, பள்ளிக்கூட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தாயார் மெஹ்ராஜ்பானு அதே பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சையது முகமது, சவுதி அரேபியாவில் உள்ள Smart Shield Cyber Security நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளது தங்களுக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சியை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!
சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!
சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
{{comments.comment}}