நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியை கைப்பற்றிய போலீசார் அதை வளைத்துப் பிடித்தனர். அந்த லாரிக்குள் கேரளா ஏடிஎம்களில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. தப்பி ஓட முயன்ற ஒரு திருடன் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லப்பட்டார். சினிமாவில் வருவது போல நீண்ட சேசிங் மூலம் இந்தக் கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். இவர்களை வெப்படை அருகே சன்னியாசிப்பட்டி என்ற இடத்தில் வைத்து மடக்கினோம். அனைவருமே ஊரகப் பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களைக் குறி வைத்துக் கொள்ளையடிப்பவர்கள். போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நபரின் பெயர் ஜூமான். காயமடைந்தவர் பெயர் அஸார் அலி. சம்பந்தப்பட்ட கும்பல் மீது வேறு வழக்குகள் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. கிருஷ்ணகிரி கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இன்ஸ்பெக்டரைத் தாக்கி விட்டுத் தப்பி ஓட முயன்றதால்தான் ஜூமான் சுட்டுக் கொல்லப்பட்டார். கூகுள் மேப் மூலமாக இவர்கள் ஏடிஎம் மையங்களை கண்டறிந்து கொள்ளையடித்து வந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
முன்னதாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் ஒரு கண்டெய்னர் லாரி மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரி மோதும் வகையில் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைதொடர்ந்து அந்த லாரி இரண்டு டூ வீலர் மற்றும் நான்கு கார்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனை அறிந்த போலீசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கண்டெய்னர் லாரியை நிறுத்த முயற்சி செய்தனர். இருப்பினும் லாரி நிற்காமல் சென்றதால் கற்களை வீசி கண்டெய்னர் லாரியை நிறுத்தினர். இதனால் வாகன ஓட்டுனர் நிலைதடுமாறி லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பித்து ஓடிவிட்டார்.
ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கண்டெய்னர் லாரியை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது இந்தக் கண்டெய்னர் லாரியில் சிலர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தின்போது மொத்தம் 5 பேர் பிடிபட்டனர். லாரியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ. 66 லட்சம், ஒரு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு போலீஸாரின் இந்த துணிகர செயல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கேரளாவிலிருந்து போலீஸார் தமிழ்நாடு விரைந்து வருகின்றனர். இந்த கொள்ளையர்களுக்கு கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையிலும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}