சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதத்தில் மிதமான மழையாகத் தொடங்கி, பின்னர் வங்கக் கடலில் உருவான புயல் மற்றும் காற்று சுழற்சி காரணமாக நவம்பர் மாதத்தில் தீவிரமடைந்தது.இதனால் மாநில முழுவதும் கன முதல் அதிக கன மழை வரை கொட்டி தீர்த்தது. இதையடுத்து டிசம்பர் மாத தொடக்கத்தில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது.

நேற்று பல்வேறு பகுதிகளில் காலையில் பனிமூட்டம் நிலவி வந்தாலும் மாலை இரவு நேரங்களில் நல்ல மழை பெய்துள்ளது. தேனி, திருச்சி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மதுரையில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட கூடுதலாக 34 சதவீதம் பெய்துள்ளது. வரும் நாட்களில் மழை தொடர இருப்பதால் வடகிழக்கு பருவ மழை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே இடத்தில் நிலவி வருகிறது. இது வட தமிழ்நாடு -ஆந்திர கடற்கரையை நோக்கி நாளை நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர்,செங்கல்பட்டு, மாவட்டங்களில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வங்க கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் மத்திய வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் திடீரென காற்றுடன் மழை பெய்ய கூடும் என்ற எச்சரிக்கையை அடுத்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}