Rain update: வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால்.. 28ம் தேதி வரை‌.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

Dec 23, 2024,07:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதத்தில் மிதமான மழையாகத் தொடங்கி, பின்னர் வங்கக் கடலில் உருவான புயல் மற்றும் காற்று சுழற்சி காரணமாக நவம்பர் மாதத்தில்  தீவிரமடைந்தது.இதனால் மாநில முழுவதும் கன முதல் அதிக கன மழை வரை கொட்டி தீர்த்தது. இதையடுத்து டிசம்பர் மாத தொடக்கத்தில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. 




நேற்று பல்வேறு பகுதிகளில் காலையில் பனிமூட்டம் நிலவி வந்தாலும் மாலை இரவு நேரங்களில் நல்ல மழை பெய்துள்ளது. தேனி, திருச்சி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மதுரையில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 


இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட கூடுதலாக 34 சதவீதம் பெய்துள்ளது. வரும் நாட்களில் மழை தொடர இருப்பதால் வடகிழக்கு பருவ மழை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது  காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே இடத்தில் நிலவி வருகிறது. இது வட தமிழ்நாடு -ஆந்திர கடற்கரையை நோக்கி நாளை நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர்,செங்கல்பட்டு, மாவட்டங்களில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வங்க கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு  மீனவர்கள் இரண்டு நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதே சமயத்தில் மத்திய வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் திடீரென காற்றுடன் மழை பெய்ய கூடும் என்ற எச்சரிக்கையை அடுத்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம்  அறிவுறுத்தி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்