சென்னை: வங்க கடல் பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் எனவும், இதனால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கும் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வு தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி இருந்ததால் கடலோரப் பகுதிகளை ஒட்டி உள்ள மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகள் நீரோடைகள்,ஏரிகள், அணைகள், என முழுவதும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ள நீர் ஊருக்குள் வந்து, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதே சமயத்தில் சம்பா சாகுபடிக்காக பயிரிடப்பட்ட விளை நிலங்களும் மழை நீரில் மூழ்கி அழுகின. இதனால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களை சீர் செய்ய அரசு உரிய மானியங்களை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே வங்க கடலில் மீண்டும் உருவாகும் காற்று சுழற்சி வலுப்பெற்று வடகடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் அறிவித்து வருகிறது.
அதன்படி,தெற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை 5:30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். பின்னர் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கன மழைக்கு நீடிக்கும். குறிப்பாக ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}