Depression: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று மாறுகிறது.. மிக கன மழைக்கு வாய்ப்பு

Nov 25, 2024,09:38 AM IST

சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்பதால்  தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தமிழ்நாட்டை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழையின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட மூன்று சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் மழை அதிகரித்தால் இன்னும் நமக்கு கூடுதலான பருவ மழைகள்  கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த பருவ மழைகள் பேருதவியாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். 




இருப்பினும் தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் மழையின் தீவிரம் அதிகரித்து கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 


இன்று கனமழை:


இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று மிக கனமழை:


கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதிகள் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் 28ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்