Depression: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று மாறுகிறது.. மிக கன மழைக்கு வாய்ப்பு

Nov 25, 2024,09:38 AM IST

சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்பதால்  தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தமிழ்நாட்டை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழையின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட மூன்று சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் மழை அதிகரித்தால் இன்னும் நமக்கு கூடுதலான பருவ மழைகள்  கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த பருவ மழைகள் பேருதவியாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். 




இருப்பினும் தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் மழையின் தீவிரம் அதிகரித்து கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 


இன்று கனமழை:


இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று மிக கனமழை:


கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதிகள் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் 28ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்