Depression: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று மாறுகிறது.. மிக கன மழைக்கு வாய்ப்பு

Nov 25, 2024,09:38 AM IST

சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்பதால்  தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தமிழ்நாட்டை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழையின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட மூன்று சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் மழை அதிகரித்தால் இன்னும் நமக்கு கூடுதலான பருவ மழைகள்  கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த பருவ மழைகள் பேருதவியாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். 




இருப்பினும் தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் மழையின் தீவிரம் அதிகரித்து கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 


இன்று கனமழை:


இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று மிக கனமழை:


கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதிகள் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் 28ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்