சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்பதால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழையின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட மூன்று சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் மழை அதிகரித்தால் இன்னும் நமக்கு கூடுதலான பருவ மழைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த பருவ மழைகள் பேருதவியாக இருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர இருப்பதால் மழையின் தீவிரம் அதிகரித்து கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மிக கனமழை:
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதிகள் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் 28ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}