சென்னையை உலுக்கிய திடீர் கன மழை.. வெளுத்தெடுத்த மழையால் மக்கள் ஹேப்பி!

Sep 16, 2023,05:21 PM IST

சென்னை: சென்னையில் இன்று இரவும், நாளை இரவும் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்த நிலையில் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் மாலையில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


சென்னை நகர் முழுவதும் பலத்த காற்றுடன் திடீர் கன மழை வெளுத்தெடுத்தது. வானம் கருத்து பலத்த மழை கொட்டியதால் மக்கள் அவதியும் அடைந்தனர். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பர்ச்சேஸுக்கு வந்தோர், பல்வேறு ஊர்களுக்குப் போவதற்காக வாகனங்களில் வந்தோர் சிரமத்தைச் சந்தித்தனர்.




சென்னை கடற்கரை, சாந்தோம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, எழும்பூர், சென்னை சென்டிரல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. அதேபோல புறநகர்கள் பலவற்றிலும் மழை பெய்தது. இதனால் வெளியூர்களுக்குச் செல்லக் கிளம்பிய மக்கள் சற்று அவதியடைந்தனர்.


இதற்கிடையே, இன்று இரவும், நாளை இரவும் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:


தென் மேற்குப் பருவ மழைக் காலத்திலேயே அதிக மழை பெய்த நாட்களை சென்னை மீனம்பாக்கம் பகுதி சந்திக்கப் போகிறது. இன்று இரவும், நாளை இரவும் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.




அடுத்த 10 முதல் 14 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை இருக்கும். குறிப்பாக வட மாவட்டங்களில் சிறப்பான மழையை எதிர்பார்க்கலாம்.


ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென் மேற்குப் பருவமழைக்காலத்தில் இதுவரை தென் சென்னை நல்ல மழையைப் பெற்றுள்ளது.  கடந்த 75 ஆண்டுகளில் இந்த மழைக்காலத்தால் மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்சமாக மழை பதிவானது 1996ம் ஆண்டுதான். அப்போது 871 மில்லி மீட்டர் மழை கிடைத்தது. தற்போது இதுவரை 788 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்னும் நமக்கு 14 நாட்கள் இருக்கின்றன. எனவே 1996 சாதனையை முறியடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.


நுங்கம்பாக்கத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 1996ம் ஆண்டு 1155 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது.  இந்த வருடம் இதுவரை 603 மில்லிமீட்டர் மழைதான் பெய்துள்ளது. சாதனை படைக்க வாய்ப்பு குறைவுதான்.  காவிரி டெல்டா பகுதியில் மழை பற்றாக்குறை குறை விரைவில் தீரும்.  


இன்று இரவு பெய்யப் போகும் மழையை என்ஜாய் பண்ணத் தயாராவோம் என்று கூறியுள்ளார் வெதர்மேன்.

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

தாடி பாலாஜி.. Nooo.. இனி பொதுச் செயலாளர் பாலாஜி.. புதுச்சேரியில் அடித்த லக்கி பிரைஸ்!

news

தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

அதிகம் பார்க்கும் செய்திகள்