சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகதனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டில் வறண்ட வானிலையும், வெயிலின் தாக்கமும் அதிகரித்தால் மக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வெயிலுக்கு இதமாக குல்பி சாப்பிட்டா எப்படி இருக்கும். அது மாதிரி அடிக்கிற வெயில்ல மக்களை குளிர்விக்க தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யுமாம்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாம்.
சென்னையைப் பொருத்தவரை, சென்னையில் ஏப்ரல் மாதத்தில் மழைக்கு வாய்ப்பில்லை எனவும், ஆனால் வெப்பம் கட்டுக்குள் இருக்கும் எனவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 15 ஆம் தேதி:
ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}