சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது. இதனால் மக்கள் குஷியில் இருந்து வந்தனர். இதற்கிடையே தென்மேற்குப் பருவமழையும் முன்கூட்டியே ஆரம்பமானது. அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக உருவாகிறது.
இதனால் தமிழக முழுவதும் பரவலாக கன முதல் மிக கனமழை வரையிலும், ஒரு சில இடங்களில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பொழிவும் இருந்து வந்தது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் தமிழ்நாட்டில் மழை அளவு குறைந்து வெப்பம் படிப்படியாக உயரும் என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் வெயிலா என மக்கள் அயர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னையை பொறுத்தவரை 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று கனமழை:
நீலகிரி, கோவை,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}