ஆஹா வரப் போறான்யா.. வரப் போறான்யா.. அடுத்த 5 நாட்களுக்கு.. 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்குமாம்!

May 24, 2024,05:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது. இதனால் மக்கள் குஷியில் இருந்து வந்தனர். இதற்கிடையே தென்மேற்குப் பருவமழையும் முன்கூட்டியே ஆரம்பமானது. அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக உருவாகிறது. 


இதனால் தமிழக முழுவதும் பரவலாக கன முதல் மிக கனமழை வரையிலும், ஒரு சில இடங்களில் இதுவரை வரலாற்றில்  இல்லாத அளவுக்கு மழை பொழிவும் இருந்து வந்தது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் தமிழ்நாட்டில் மழை அளவு குறைந்து வெப்பம் படிப்படியாக உயரும் என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்திருந்தார்.




இந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால்  மீண்டும் வெயிலா என மக்கள் அயர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னையை பொறுத்தவரை 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று கனமழை:


நீலகிரி, கோவை,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  வானிலை மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்