மதுரை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பழனிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மதுரை டூ பழனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இக்கோவில் ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது. வேறு எங்கும் இந்த வகை சிலையை காண முடியாது என்பது இக்கோயிலின் சிறப்பாகும். அதே சமயத்தில் பக்தர்கள் நினைத்தது நிறைவேற கந்தப் பெருமானை வழிபட பழனி மலையை நாடி தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மார்கழி, தை மாதங்களில் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற, பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரை சென்று முருகனை தரிசித்து செல்கின்றனர். இதனால் மார்கழி,தை மாதங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். குறிப்பாக தை மாதங்களில் வரும் பௌர்ணமி அன்று தைப்பூசம் நாள் முருகனுக்கு உகந்தது. இந்த நன்னாளில் பக்தர்கள் பால்காவடி, பறவை காவடி, பால்குடம், என தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் தை 30ஆம் தேதி அதாவது பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. அதிலும் இந்த வருடம் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தைப்பூசம் வருவதால் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தைப்பூசத்தன்று மதுரையிலிருந்து பழனிக்கு பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மதுரை டூ பழனி (06722) இடையே தைப்பூச சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு காலையில் 11:30 மணிக்கு பழனிக்கு சென்றடையும்.
அதேபோல் மறு மார்க்கமாக பழனி டூ மதுரை சிறப்பு ரயில் (06721), பழனியில் இருந்து இருந்து மாலை 3 மணிக்கு புறப்படுகிறது. இந்த தைப்பூச சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும் என செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
{{comments.comment}}