IPL 2025: ஐபிஎல் திருவிழா இன்று கோலாகல ஆரம்பம்.. உற்சாகத்தில் வலம் வரும் ரசிகர்கள்..!

Mar 22, 2025,05:05 PM IST

கொல்கத்தா:   2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது.


18வது ஐபிஎல் திருவிழா  இன்று முதல் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 78 லீக் போட்டிகள் கொண்ட இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்ச்ர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ்  ஆகிய 10 அணிகள் மோதுகின்றன. 




இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று 7:30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைட்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்ச்  அணிகள் மோதுகின்றன. இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பலப்பரீச்சையில் ஈடுபட்டுள்ளனர். இந்த முதல் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உற்சாகமாக வலம் வருகின்றனர். 


முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  ஐபிஎல் திருவிழா கண் கவரும் கலை நிகழ்ச்சிகளுடன்  கோலாகலமாக துவங்குகிறது. கொல்கத்தா மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


இதற்கிடையே தெற்கு வங்காளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை  இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது. அதாவது ஐபிஎல் 2025 தொடங்கும் மார்ச் 22 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையும், ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் தொடரின் போது மழை குறுக்கே வந்து ஆட்டம் தடைப்படுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

news

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்