சிவன் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை.. அர்த்தநாரீஸ்வரர்!

Feb 24, 2025,12:27 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சிவன் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை. இந்த தத்துவத்தை விளக்குவதற்காகவே அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் எடுத்தார் சிவபெருமான்.  சிவபெருமானின் பல அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்பும் தனித்தன்மையும் வாய்ந்தது.


அர்த்தநாரீஸ்வரர்= அர்த்தனாரி + ஈஸ்வரர் அதாவது அர்த்தம் என்றால் பாதி என்று பொருள் ,நாரி என்றால் பெண் என்று பொருள் .ஆணுருவமும், பெண்ணுருவமும் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரீஸ்வரர் என்கிற பெயர் ஈசனுக்கு வந்தது.


அர்த்தநாரீஸ்வரர் உள் கதை விளக்கம்:




சிவன் ,பார்வதி திருமணமான உடன் இயற்கையாகவே தன் அனுபவத்தை பார்வதியிடம் சிவன் பகிர்ந்து கொள்வார். உடனே சிவபெருமானிடம் பார்வதி ,"உங்களுக்குள் நீங்கள் அனுபவிக்கும் இந்த நிலையை நானும் அனுபவிக்க விரும்புகிறேன் ,அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?கூறுங்கள், எந்தவிதமான கடினமான செயலும் செய்ய நான் தயாராக உள்ளேன்" என்றார் பார்வதி தேவி.


அதற்கு சிவன் சிரித்து விட்டு, "தேவி ,நீ பெரிய சாதனை எதுவும் செய்யத் தேவையில்லை, என் மடியில் வந்து உட்கார்" என்றார் .பார்வதி ,சிவனின் இடது மடியில் அமர்ந்தார். சிவன் தன் பாதியை இழந்து பார்வதி தேவியை தன் பாதியாக சேர்த்துக் கொண்டார் .இவ்வாறு ஆண் பாதி பெண் பாதி உருவ அமைப்பில் அர்த்தநாரீஸ்வரர் உருவமாக மாறினார் சிவபெருமான் .பரவச நிலைஅடைந்தார் சிவபெருமான்.


திருச்செங்கோடு சிவன் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் தான் மூலவராக உள்ளார். இவர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார். உமாதேவி யாருக்கு அர்த்தநாரீஸ்வரி, பாகம் பிரியாள் என்ற பெயர்களும் உண்டு. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் அருள் பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரர் தென்னிந்தியாவிலேயே உள்ள பழைய வடிவங்களில் ஒன்று என்று கூறுகின்றனர். இங்கு சிவன் காளையில் ஏறி அமர்ந்தது போலவும், பார்வதி தேவி வீணையுடனும் காட்சி தருகின்றனர்.


ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் இல்லை என்கிற வாழ்க்கை தத்துவத்தை அதாவது ஆன்மீக ரீதியாக மட்டுமில்லாமல், வாழ்வியல் ரீதியாகவும் விளக்குகிறது அர்த்தநாரீஸ்வரர் அவதாரம். 


மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்..  உங்கள் ஸ்வர்ணலட்சுமியுடன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Heavy Rain Alert: சென்னை மக்களே கவனம்.. 23, 23 தேதிகளில் சூப்பர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தகவல்!

news

தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!

news

Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?

news

தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்