- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 10 திருவெம்பாவை பாசுரம் 10.. பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்!
திருவெம்பாவை பாசுரம் 10 :
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
பொருள் :
சிவ பெருமானின் திருவடிகள் ஏழு பாதாள உலங்களையும் கடந்து, வார்த்தைகளால் விளக்கி சொல்ல முடியாத சிறப்புடன் திகழ்கின்றன. மலர்கள் பலவும் சூடிய அவனது திருமுடி அனைத்திற்கும் மேலானதாக உள்ளது. அவன் ஒரு உருவன் கொண்டவன் கிடையாது. அன்னை பராசக்தியை தன்னுடைய உடலில் சேர்த்து இரண்டு உருவமாக அர்த்தநாரீஸ்வரனாக இருப்பவன். வேதங்களும், விண்ணுலகில் உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும் பாடி துதித்தாலும் அவனது பெருமையை சொல்லி விட முடியாதவன். அவர் அடியாளர்களின் உள்ளங்களில் வசிப்பவன். குற்றமில்லாத குலத்தில் பிறந்து சிவனுக்கு தொண்டு செய்யம் பெண் பிள்ளைகளே! அவனுடைய ஊர் எது, அவன் எப்படிப்பட்ட தன்மை கொண்டவன், அவனுக்கு எத்தனை பெயர்கள், அவனை எப்படி பாட வேண்டும் என்பதை முழுவதுமாக அறிந்தவர் எவரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க நம்முடைய தலைவனாகிய சிவ பெருமானை நம்மால் முடிந்த மொழிகளில் போற்றி பாடிடுவோம் வாருங்கள் பெண்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}