- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 10 திருவெம்பாவை பாசுரம் 10.. பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்!
திருவெம்பாவை பாசுரம் 10 :
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள் :
சிவ பெருமானின் திருவடிகள் ஏழு பாதாள உலங்களையும் கடந்து, வார்த்தைகளால் விளக்கி சொல்ல முடியாத சிறப்புடன் திகழ்கின்றன. மலர்கள் பலவும் சூடிய அவனது திருமுடி அனைத்திற்கும் மேலானதாக உள்ளது. அவன் ஒரு உருவன் கொண்டவன் கிடையாது. அன்னை பராசக்தியை தன்னுடைய உடலில் சேர்த்து இரண்டு உருவமாக அர்த்தநாரீஸ்வரனாக இருப்பவன். வேதங்களும், விண்ணுலகில் உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும் பாடி துதித்தாலும் அவனது பெருமையை சொல்லி விட முடியாதவன். அவர் அடியாளர்களின் உள்ளங்களில் வசிப்பவன். குற்றமில்லாத குலத்தில் பிறந்து சிவனுக்கு தொண்டு செய்யம் பெண் பிள்ளைகளே! அவனுடைய ஊர் எது, அவன் எப்படிப்பட்ட தன்மை கொண்டவன், அவனுக்கு எத்தனை பெயர்கள், அவனை எப்படி பாட வேண்டும் என்பதை முழுவதுமாக அறிந்தவர் எவரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க நம்முடைய தலைவனாகிய சிவ பெருமானை நம்மால் முடிந்த மொழிகளில் போற்றி பாடிடுவோம் வாருங்கள் பெண்களே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}