- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 13 திருவெம்பாவை பாசுரம் 13.. பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
திருவெம்பாவை 13 :
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள் :
கரிய நிற குவளை மலர்கள், சிவந்த தாமரை மலர்கள் அழகாக மலர்ந்திருக்கும் இந்த குளத்தில் ஒரு பகுதியில் பறவைகள் நீர் அருந்தி செல்கின்றன. மற்றொரு புறம் தங்களின் அழுக்குகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள மக்கள் வருவகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்லி சத்தமிடுகிறார்கள். இதனால் இந்த குளம் முழுவதும் சிவன் மற்றும் பார்வதியும் எங்கும் நிறைந்திருப்பது போல் இந்த குளம் காட்சி அளிக்கிறது. இந்த தெய்வீக தன்மை கொண்ட குளத்தில் சங்கு வளையல்கள் சத்தமிட, கால் சிலம்புகள் கலகலவென ஒலி எழுப்ப, குமிழ்கள் எழ, மீன்கள் நடும் வகையில் பாய்ந்து நீராடி, நம்முடைய பிறவி பிணியில் இருந்து நீராட பெண்களே வாருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
{{comments.comment}}