- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 13 திருவெம்பாவை பாசுரம் 13.. பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
திருவெம்பாவை 13 :
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள் :
கரிய நிற குவளை மலர்கள், சிவந்த தாமரை மலர்கள் அழகாக மலர்ந்திருக்கும் இந்த குளத்தில் ஒரு பகுதியில் பறவைகள் நீர் அருந்தி செல்கின்றன. மற்றொரு புறம் தங்களின் அழுக்குகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள மக்கள் வருவகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்லி சத்தமிடுகிறார்கள். இதனால் இந்த குளம் முழுவதும் சிவன் மற்றும் பார்வதியும் எங்கும் நிறைந்திருப்பது போல் இந்த குளம் காட்சி அளிக்கிறது. இந்த தெய்வீக தன்மை கொண்ட குளத்தில் சங்கு வளையல்கள் சத்தமிட, கால் சிலம்புகள் கலகலவென ஒலி எழுப்ப, குமிழ்கள் எழ, மீன்கள் நடும் வகையில் பாய்ந்து நீராடி, நம்முடைய பிறவி பிணியில் இருந்து நீராட பெண்களே வாருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}