மார்கழி 13 திருவெம்பாவை பாசுரம் 13.. பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்

Dec 27, 2024,05:26 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 13 திருவெம்பாவை பாசுரம் 13.. பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்


திருவெம்பாவை 13 :


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து

நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.




பொருள் :


கரிய நிற குவளை மலர்கள், சிவந்த தாமரை மலர்கள் அழகாக மலர்ந்திருக்கும் இந்த குளத்தில் ஒரு பகுதியில் பறவைகள் நீர் அருந்தி செல்கின்றன. மற்றொரு புறம் தங்களின் அழுக்குகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள மக்கள் வருவகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்லி சத்தமிடுகிறார்கள். இதனால் இந்த குளம் முழுவதும் சிவன் மற்றும் பார்வதியும் எங்கும் நிறைந்திருப்பது போல் இந்த குளம் காட்சி அளிக்கிறது. இந்த தெய்வீக தன்மை கொண்ட குளத்தில் சங்கு வளையல்கள் சத்தமிட, கால் சிலம்புகள் கலகலவென ஒலி எழுப்ப, குமிழ்கள் எழ, மீன்கள் நடும் வகையில் பாய்ந்து நீராடி, நம்முடைய பிறவி பிணியில் இருந்து நீராட பெண்களே வாருங்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்