- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 17 திருவெம்பாவை பாசுரம் 17 - செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
திருவெம்பாவை பாசுரம் 17 :
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

பொருள் :
சிவந்த தாமரை போன்ற கண்களை உடைய நாராயணன், நான்கு திசைகளில் முகம் கொண்ட பிரம்மா, தேவர்கள் என எவருக்கும் அளிக்காத இன்பத்தை நமக்கு அள்ளி வழங்க நம் தலைவாகிய சிவ பெருமான் அனைவரின் வீடுகளிலும் எழுந்தருளி உள்ளார். அவரது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் நமக்காக இறங்கி வந்துள்ளான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதம் போன்ற இன்பத்தை தரும் நம்முடைய தலைவனான அந்த சிவனை வணங்கி நலன்கள் பலவும் பெறுவதற்காக தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் குதித்து நீராடி அவனின் தரிசனத்தை பெறுவதற்காக, தேன் சிந்தும் மலர்களை கருமையான கூந்தலில் சூடிய பெண்களே தயாராகுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}