மார்கழி 17 திருவெம்பாவை பாசுரம் 17 - செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

Dec 31, 2024,04:27 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 17 திருவெம்பாவை பாசுரம் 17 - செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்


திருவெம்பாவை பாசுரம் 17 :


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.




பொருள் : 


சிவந்த தாமரை போன்ற கண்களை உடைய நாராயணன், நான்கு திசைகளில் முகம் கொண்ட பிரம்மா, தேவர்கள் என எவருக்கும் அளிக்காத இன்பத்தை நமக்கு அள்ளி வழங்க நம் தலைவாகிய சிவ பெருமான் அனைவரின் வீடுகளிலும் எழுந்தருளி உள்ளார். அவரது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் நமக்காக இறங்கி வந்துள்ளான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதம் போன்ற இன்பத்தை தரும் நம்முடைய தலைவனான அந்த சிவனை வணங்கி நலன்கள் பலவும் பெறுவதற்காக தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் குதித்து நீராடி அவனின் தரிசனத்தை பெறுவதற்காக, தேன் சிந்தும் மலர்களை கருமையான கூந்தலில் சூடிய பெண்களே தயாராகுங்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்