- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 17 திருவெம்பாவை பாசுரம் 17 - செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
திருவெம்பாவை பாசுரம் 17 :
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
பொருள் :
சிவந்த தாமரை போன்ற கண்களை உடைய நாராயணன், நான்கு திசைகளில் முகம் கொண்ட பிரம்மா, தேவர்கள் என எவருக்கும் அளிக்காத இன்பத்தை நமக்கு அள்ளி வழங்க நம் தலைவாகிய சிவ பெருமான் அனைவரின் வீடுகளிலும் எழுந்தருளி உள்ளார். அவரது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் நமக்காக இறங்கி வந்துள்ளான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதம் போன்ற இன்பத்தை தரும் நம்முடைய தலைவனான அந்த சிவனை வணங்கி நலன்கள் பலவும் பெறுவதற்காக தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் குதித்து நீராடி அவனின் தரிசனத்தை பெறுவதற்காக, தேன் சிந்தும் மலர்களை கருமையான கூந்தலில் சூடிய பெண்களே தயாராகுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}