மார்கழி 18 - திருவெம்பாவை 18 - அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

Jan 01, 2025,04:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை 18 :


அண்ணாமலையான் அடிக்கமல் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி

கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.




பொருள் :


சூரியனின் ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டதும் எப்படி வானில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தும் மறைந்து விடுமோ அப்படி, அண்ணாமலையாரின் தாமரை போன்ற சிவந்த திருவடிகளை பணிந்ததும் தேவர்களின் மணிமுடியில் இருக்கும் நவரத்தினங்கள் ஒளி இழந்து விட்டன. பெண், ஆண், திருநங்கை என அனைத்து உருவிலும் காட்சி தரும் அவர் வானமாகவும், பூமியாகவும், மற்ற உலகங்களாகவும் விளங்குகிறார். கண்ணுக்கு அமுதத்தை போன்ற இனிமை தரும் அவரது சிலம்பணிந்த திருவடிகளை போற்றி பாடி புண்ணிய பலன்களை பெற்றிட இந்த பூக்கள் நிறைந்திருக்கும் குளத்தில் குதித்து நீராட வாருங்கள் பெண்களே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

news

2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்

news

இந்தியாவின் புதிய மைல்கல்... உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வு!

news

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலின் தல வரலாறு

news

உலகத்திலேயே மிகப் பெரிய பெருமிதம் எது தெரியுமா.. Proud To Be A Woman!

news

ஹலோ ஏஐ.. உன்னால் இதைச் செய்ய முடியுமா.. Will AI Heal the Earth We Scarred?

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக முள் சீதா பயன்பாடு

news

பரபரப்பு.. படபடப்பு.. அந்த கடைசி நேர டென்ஷன்.. THE FINAL SUBMISSIONS..!

அதிகம் பார்க்கும் செய்திகள்