மார்கழி 18 - திருவெம்பாவை 18 - அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

Jan 01, 2025,04:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை 18 :


அண்ணாமலையான் அடிக்கமல் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி

கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.




பொருள் :


சூரியனின் ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டதும் எப்படி வானில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தும் மறைந்து விடுமோ அப்படி, அண்ணாமலையாரின் தாமரை போன்ற சிவந்த திருவடிகளை பணிந்ததும் தேவர்களின் மணிமுடியில் இருக்கும் நவரத்தினங்கள் ஒளி இழந்து விட்டன. பெண், ஆண், திருநங்கை என அனைத்து உருவிலும் காட்சி தரும் அவர் வானமாகவும், பூமியாகவும், மற்ற உலகங்களாகவும் விளங்குகிறார். கண்ணுக்கு அமுதத்தை போன்ற இனிமை தரும் அவரது சிலம்பணிந்த திருவடிகளை போற்றி பாடி புண்ணிய பலன்களை பெற்றிட இந்த பூக்கள் நிறைந்திருக்கும் குளத்தில் குதித்து நீராட வாருங்கள் பெண்களே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!

news

இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்

news

ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!

news

மியாமி ஜி 20 மாநாடு.. தென் ஆப்பிரிக்க அழைக்கப்படாது.. அமெரிக்கா முடிவு!

news

ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!

news

ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு

news

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

news

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!

news

அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!

அதிகம் பார்க்கும் செய்திகள்