- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை 18 :
அண்ணாமலையான் அடிக்கமல் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

பொருள் :
சூரியனின் ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டதும் எப்படி வானில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தும் மறைந்து விடுமோ அப்படி, அண்ணாமலையாரின் தாமரை போன்ற சிவந்த திருவடிகளை பணிந்ததும் தேவர்களின் மணிமுடியில் இருக்கும் நவரத்தினங்கள் ஒளி இழந்து விட்டன. பெண், ஆண், திருநங்கை என அனைத்து உருவிலும் காட்சி தரும் அவர் வானமாகவும், பூமியாகவும், மற்ற உலகங்களாகவும் விளங்குகிறார். கண்ணுக்கு அமுதத்தை போன்ற இனிமை தரும் அவரது சிலம்பணிந்த திருவடிகளை போற்றி பாடி புண்ணிய பலன்களை பெற்றிட இந்த பூக்கள் நிறைந்திருக்கும் குளத்தில் குதித்து நீராட வாருங்கள் பெண்களே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
{{comments.comment}}