- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை 18 :
அண்ணாமலையான் அடிக்கமல் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பொருள் :
சூரியனின் ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டதும் எப்படி வானில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தும் மறைந்து விடுமோ அப்படி, அண்ணாமலையாரின் தாமரை போன்ற சிவந்த திருவடிகளை பணிந்ததும் தேவர்களின் மணிமுடியில் இருக்கும் நவரத்தினங்கள் ஒளி இழந்து விட்டன. பெண், ஆண், திருநங்கை என அனைத்து உருவிலும் காட்சி தரும் அவர் வானமாகவும், பூமியாகவும், மற்ற உலகங்களாகவும் விளங்குகிறார். கண்ணுக்கு அமுதத்தை போன்ற இனிமை தரும் அவரது சிலம்பணிந்த திருவடிகளை போற்றி பாடி புண்ணிய பலன்களை பெற்றிட இந்த பூக்கள் நிறைந்திருக்கும் குளத்தில் குதித்து நீராட வாருங்கள் பெண்களே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வங்க கடலில் மே 27ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!
அமலாக்கத்துறையின் டாஸ்மாக் ரெய்டுகள்.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. இடைக்காலத் தடை
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்.. 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக: எம்.பி. சு.வெங்கடேசன்
தனுஷின் புதிய படத்திற்கு என்ன பெயர் தெரியுமா..?
அரபிக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
கிவி (KIWI) பழத்தில் குவிந்து கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்.. விலையும் ஜாஸ்தி.. பலனும் அதிகம்!
ஆர்பிஐ விதிமுறைகளை திரும்பப் பெறுக.. அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்..!
{{comments.comment}}