மார்கழி 5 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாசுரம் 5.. மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

Dec 19, 2024,05:08 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 5 :


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்




பொருள் :


திருமாலும், பிரம்மாவும் காண முடியாத அண்ணாமலையாக திகழும் நம்முடைய தலைவனாகி சிவ பெருமானை பற்றி உனக்கு தான் எல்லாம் தெரியும் என பொய்களை பேசுவாயே. அந்த பால் சுரக்கம், தேன் போல் இனிக்கும் வாயுடைய வஞ்சகமான பெண்ணே, உன்னுடைய கதவை திறந்து முதலில் வெளியே வா. இந்த உலமும் மேல் உலகமும் பிற உலகத்தில் வசிப்பவர்களும் அறிவதற்கு அருமையான, அழகாக இருந்து சிவ பெருமான், நம்முடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுத்து அருள் செய்யும் சிவ பெருமானின் அரிய குணத்தை போற்றி பாடிட வேண்டும். அவரை போற்றி பாடி, நாங்கள் முறையிட்டுக் கொண்டிருப்பதை அறியாமல் நீ இப்படி தூங்குகிறாயே. அழகிய நீண்ட கூந்தலை உடைய பெண்ணே, இது தானோ உன்னுடைய சிவ பக்தி?



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்

news

100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

news

டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!

news

தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்