- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை பாசுரம் 5 :
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
பொருள் :
திருமாலும், பிரம்மாவும் காண முடியாத அண்ணாமலையாக திகழும் நம்முடைய தலைவனாகி சிவ பெருமானை பற்றி உனக்கு தான் எல்லாம் தெரியும் என பொய்களை பேசுவாயே. அந்த பால் சுரக்கம், தேன் போல் இனிக்கும் வாயுடைய வஞ்சகமான பெண்ணே, உன்னுடைய கதவை திறந்து முதலில் வெளியே வா. இந்த உலமும் மேல் உலகமும் பிற உலகத்தில் வசிப்பவர்களும் அறிவதற்கு அருமையான, அழகாக இருந்து சிவ பெருமான், நம்முடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுத்து அருள் செய்யும் சிவ பெருமானின் அரிய குணத்தை போற்றி பாடிட வேண்டும். அவரை போற்றி பாடி, நாங்கள் முறையிட்டுக் கொண்டிருப்பதை அறியாமல் நீ இப்படி தூங்குகிறாயே. அழகிய நீண்ட கூந்தலை உடைய பெண்ணே, இது தானோ உன்னுடைய சிவ பக்தி?
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!
ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு
ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்
இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!
நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!
ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை
தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
{{comments.comment}}