திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு

Mar 24, 2025,02:48 PM IST

சென்னை: அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல, கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக   வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் என்று கூறியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.


தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக பாஜகவிற்கும் திமுகாவிற்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் தமிழக பாஜக சார்பில் நேற்று பொதுக்ககூட்டம் நடந்தது. அப்போது திமுகவினர்களை அண்ணாமலை கடுமையாக தாக்கிப் பேசி இருந்தார். அதற்கு பதில் கூறும் விதமாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.


இது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், படிப்பு, மனம்,சேவைக்கும் சம்மந்தம் இல்லை. மனிதாபிமானத்தோடு உயர் பதவிக்கு யார் வந்தாலும் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது. என்னை சரித்திரப்பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை கர்நாடகாவில் டூப் போலீஸ் , லஞ்சம வாங்கிய பேர்வழி என நான் கூட குற்றம் சுமத்த முடியும். ஆதாரம் இல்லாமல் வாய் நுளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை.  ஆதாரத்தை காட்டி தான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும். அதை விடுத்து போகிற போக்கில் ஏதாவது வாரித்தூற்றி விட்டு போனால் எப்படி முறையாகும். ஆதாரத்தை காட்டச் சொல்லுங்கள்.




அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல, கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக   வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். ஊசி போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026 இல் மக்கள் தூக்கி எறிய தயாராக இருக்கின்றனர். திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். நீதிபதிகளையே தலைக்கு மேலே இருப்பதற்கு ஒப்பானவர்கள் என பேசுகிறவர்கள் நாங்கள் அல்ல. 


எங்களுக்கு எங்கள் முன்னோர்களால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறை என்றாலும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள தயாராகாக இருப்பது தான் திமுக. இந்தியாவின் வரைபடத்தில் கீழே இருக்கிற தமிழ்நாட்டை வரைபடத்தின் மேலே இருக்கிற அத்தனை பேரையும் திருப்பிப் பார்க்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  லோக்சபா தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றி அலறவிட்டோம். 2026 தேர்தலில் 200 தொகுதிகள் என்பது நிச்சயம். 234 தொகுதிகளில் வெற்றி என்பது லட்சியம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

அதிகம் பார்க்கும் செய்திகள்