திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு

Mar 24, 2025,02:48 PM IST

சென்னை: அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல, கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக   வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் என்று கூறியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.


தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக பாஜகவிற்கும் திமுகாவிற்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் தமிழக பாஜக சார்பில் நேற்று பொதுக்ககூட்டம் நடந்தது. அப்போது திமுகவினர்களை அண்ணாமலை கடுமையாக தாக்கிப் பேசி இருந்தார். அதற்கு பதில் கூறும் விதமாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.


இது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், படிப்பு, மனம்,சேவைக்கும் சம்மந்தம் இல்லை. மனிதாபிமானத்தோடு உயர் பதவிக்கு யார் வந்தாலும் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது. என்னை சரித்திரப்பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை கர்நாடகாவில் டூப் போலீஸ் , லஞ்சம வாங்கிய பேர்வழி என நான் கூட குற்றம் சுமத்த முடியும். ஆதாரம் இல்லாமல் வாய் நுளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை.  ஆதாரத்தை காட்டி தான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும். அதை விடுத்து போகிற போக்கில் ஏதாவது வாரித்தூற்றி விட்டு போனால் எப்படி முறையாகும். ஆதாரத்தை காட்டச் சொல்லுங்கள்.




அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல, கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக   வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். ஊசி போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026 இல் மக்கள் தூக்கி எறிய தயாராக இருக்கின்றனர். திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். நீதிபதிகளையே தலைக்கு மேலே இருப்பதற்கு ஒப்பானவர்கள் என பேசுகிறவர்கள் நாங்கள் அல்ல. 


எங்களுக்கு எங்கள் முன்னோர்களால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறை என்றாலும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள தயாராகாக இருப்பது தான் திமுக. இந்தியாவின் வரைபடத்தில் கீழே இருக்கிற தமிழ்நாட்டை வரைபடத்தின் மேலே இருக்கிற அத்தனை பேரையும் திருப்பிப் பார்க்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  லோக்சபா தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றி அலறவிட்டோம். 2026 தேர்தலில் 200 தொகுதிகள் என்பது நிச்சயம். 234 தொகுதிகளில் வெற்றி என்பது லட்சியம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்