சென்னை: தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் பாஜக கூட்டணியை விரும்புவார்கள் என்று கோயம்புத்தூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேசினார். அவர் பேசுகையில்,
கூட்டணி - கட்சி மேலிடம் முடிவெடுக்கும்

கூட்டணி தொடர்பு மற்றும் பேச்சு வார்த்தை குறித்து கட்சியின் தேசிய தலைமை தான் அறிவிக்கும். அதுவரைக்கும் செய்வதற்கு ஏராளமான பணிகள் இருக்கிறது. வருகிற 28ஆம் தேதி காலை தமிழகத்தினுடைய மாநில தேர்தல் அலுவலகம் திறக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணிகளை துவங்கி விட்டது.
ஒவ்வொரு தொகுதிக்கும் அமைப்பாளர்கள், பொறுப்பாளர் நியமித்து அவர்கள் மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு, விவசாய மாநாடு என நடத்த துவங்கிவிட்டார்கள். எங்களுடைய தேசிய தலைவர் நட்டா அவர்கள் எலக்சன் ஆந்தத்தை வெளியிட்டுவிட்டார்.
எப்பொழுதும் போல தேர்தல் பிரச்சாரம் முதலில் துவங்கப்பட்டு விட்டது. களத்திலே பாஜக முன்பாக செல்கிறது. தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியல் விவரங்கள் எல்லாமே கட்சி தலைமை முடிவு செய்யும். அதற்கான பிரசாரம் எப்போதும் போல தேர்தல் களத்தில் பாஜக முன்னரே ஆரம்பித்து விட்டது.
அடுத்த பிரதமர் யார்
வருகின்ற தேர்தலில் இந்த நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு தான் மக்கள் பதில் அளிக்க போகின்றார்கள். அதை ஒட்டி மக்களிடம் முன்வைக்க வேண்டிய கேள்வியே, இந்த நாட்டை யார் ஆட்சி செய்யக்கூடியவர். இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு வாய்ப்பு இருக்கக்கூடிய யார். யார் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களோ அவர்களுக்கு மார்க் போடுங்கள் என்று தான் கேட்க வேண்டும்.
தேர்தல் என்பது முழுக்க முழுக்க மத்தியிலே அமையக்கூடிய ஆட்சியை பொருத்தது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அத்தனை பேரும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை விரும்புவார்கள் என கூறியுள்ளார்.
                                                                            12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 04, 2025... இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ராசிகள்
                                                                            மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
                                                                            SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
                                                                            தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
                                                                            கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
                                                                            அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
                                                                            சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
                                                                            கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
                                                                            'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
{{comments.comment}}