திருத்தணி முருகன் கோவிலுக்குப் போறீங்களா.. 3 மணி நேரம் நடை சாத்தப்படும்.. டைம் நோட் பண்ணிக்கங்க!

Aug 19, 2024,11:58 AM IST

சென்னை:   அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் இன்று 3 மணி நேரம் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




தமிழ்நாட்டில் வரலட்சுமி நோன்பு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மக்கள் கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அதிகமாக கூடியிருந்தனர். அந்த வரிசையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. தொடர்ந்து ‌பக்தர்கள்  காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால்  காலை 6:00 மணி முதல் இரவு 8.45 மணி வரை நடை திறக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


இன்று பூணூல் அணிவிக்கும் தினமான ஆவணி அவிட்டம். இந்த நன்னாளில் அர்ச்சகர்கள் மற்றும் தலைமை குழுக்கள் பூணூல் மாற்றம் செய்வர். இதன் காரணமாக, திருத்தணி முருகன் கோவில் மதியம் 12 மணி முதல் 3:00 மணி வரை கோவில் நடை  சாத்தப்படும். இந்த நேரத்தில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


மேலும் இந்த நேரத்தில் கோவிலில் பணி புரியும் அச்சகர்கள் மற்றும் குருக்கள் என மொத்தம் 75க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றம் செய்ய உள்ளனர். இதற்கான நிகழ்ச்சி இன்று கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்