இன்று இரண்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Feb 24, 2024,05:49 PM IST

சென்னை: ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் மதிய வேளைகளில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர். தற்போதே வெயில் அதிகரித்தால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும் என மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த சமயத்தில் வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என கூறியுள்ளது.




கடந்த வாரம் அறிவிப்பில்,இன்றைய நாளில் தமிழகத்தில்  பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். அதிகபட்சம் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். இது தவிர தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.


இந்த நிலையில் இன்று ( பிப்ரவரி 24) ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  மழை பெய்ய கூடும் எனவும் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்