சென்னை: ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் மதிய வேளைகளில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர். தற்போதே வெயில் அதிகரித்தால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும் என மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த சமயத்தில் வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என கூறியுள்ளது.
கடந்த வாரம் அறிவிப்பில்,இன்றைய நாளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். அதிகபட்சம் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். இது தவிர தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று ( பிப்ரவரி 24) ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய கூடும் எனவும் அறிவித்துள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}