இன்று இரண்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Feb 24, 2024,05:49 PM IST

சென்னை: ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் மதிய வேளைகளில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர். தற்போதே வெயில் அதிகரித்தால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும் என மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த சமயத்தில் வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என கூறியுள்ளது.




கடந்த வாரம் அறிவிப்பில்,இன்றைய நாளில் தமிழகத்தில்  பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். அதிகபட்சம் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். இது தவிர தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.


இந்த நிலையில் இன்று ( பிப்ரவரி 24) ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  மழை பெய்ய கூடும் எனவும் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்