சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்காக ஒரு புதிய வசதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தேர்வு தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ டிஎன்பிஎஸ்சி telegram சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
அரசு துறையில் உள்ள ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் குரூப்-1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என பல்வேறு கட்டங்களாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் டிஎன்பிஎஸ்சி சார்பாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரசுத் துறையில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பை அவ்வப்போது டிஎன்பிசி நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ இணையதளம், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அப்டேட்டுகள் தரப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் தேர்வாளர்கள் போட்டி தேர்வுகள் குறித்த அப்டேட்டுகளை உற்று நோக்கி கொண்டே இருந்தால்தான் டிஎன்பிஎஸ்சி குறித்த தகவல்களை முழுமையாக அறிய முடிகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக மேலும் ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது.
அது என்னவென்றால் தேர்வாளர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான டிஎன்பிஎஸ்சி telegram சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஎன்பிஎஸ்சி telegram சேனலில் சேர விரும்பும் தேர்வாளர்கள், இதுதொடர்பான டெலிகிராம் சானலின் QR code-ஐ ஸ்கேன் செய்து அதில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி போட்டித் தேர்வாளர்களுக்கு கவலை இல்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடனே இந்த டெலிகிராம் சானலிலும் தெரிந்து கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}