சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்காக ஒரு புதிய வசதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தேர்வு தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ டிஎன்பிஎஸ்சி telegram சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
அரசு துறையில் உள்ள ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் குரூப்-1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என பல்வேறு கட்டங்களாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் டிஎன்பிஎஸ்சி சார்பாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரசுத் துறையில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பை அவ்வப்போது டிஎன்பிசி நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ இணையதளம், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அப்டேட்டுகள் தரப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் தேர்வாளர்கள் போட்டி தேர்வுகள் குறித்த அப்டேட்டுகளை உற்று நோக்கி கொண்டே இருந்தால்தான் டிஎன்பிஎஸ்சி குறித்த தகவல்களை முழுமையாக அறிய முடிகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக மேலும் ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது.
அது என்னவென்றால் தேர்வாளர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான டிஎன்பிஎஸ்சி telegram சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஎன்பிஎஸ்சி telegram சேனலில் சேர விரும்பும் தேர்வாளர்கள், இதுதொடர்பான டெலிகிராம் சானலின் QR code-ஐ ஸ்கேன் செய்து அதில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி போட்டித் தேர்வாளர்களுக்கு கவலை இல்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடனே இந்த டெலிகிராம் சானலிலும் தெரிந்து கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}