சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 ரூபாய் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 18ம் தேதியில் இருந்து தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் கடந்த 21ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.480 அதிகரித்தது. அதன்பின்னர் தொடர்ந்து தங்கத்தின் விலையில் எந்த ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் முதல் நாள் சவரனுக்கு ரூ.80 குறைந்தது. கிறிஸ்துமஸ் நாளன்று, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 1 சவரன் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் மறுநாள் அதாவது 26 ஆம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (26.12.24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,125க்கும், 8 கிராமிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,885க்கும், 8 கிராமிற்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஒரு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}