சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 ரூபாய் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 18ம் தேதியில் இருந்து தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் கடந்த 21ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.480 அதிகரித்தது. அதன்பின்னர் தொடர்ந்து தங்கத்தின் விலையில் எந்த ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் முதல் நாள் சவரனுக்கு ரூ.80 குறைந்தது. கிறிஸ்துமஸ் நாளன்று, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 1 சவரன் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் மறுநாள் அதாவது 26 ஆம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (26.12.24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,125க்கும், 8 கிராமிற்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,885க்கும், 8 கிராமிற்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஒரு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}