இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

Jun 09, 2025,12:18 PM IST

சென்னை : முருகப் பெருமான் அவதரித்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்தரத்தில் என புராணங்கள் சொல்கின்றன. இதனால் இது முருகப் பெருமானுக்குரிய தினமாக கருதி வைகாசி விசாகம் பெருவிழாவாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பால் குடம் ஏந்தியும், காவடி எடுத்தும் வந்து நேரத்திக்கடன் நிறைவேற்றுவார்கள். வைகாசி விசாகம் அன்று, சிவ பெருமானின் நெற்றிக் கணக்கில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து உதித்த முருகப் பெருமானின் மனம் குளிர பால் அபிஷேகம் செய்வதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.


இந்த ஆண்டு ஜூன் 09ம் தேதி திங்கட்கிழமையான இன்று வைகாசி விசாகம் அமைந்துள்ளது. ஜூன் 08ம் தேதி பகல் 2 மணிக்கே விசாகம் நட்சத்திரம் துவங்கி, ஜூன் 09ம் தேதி மாலை 04.40 மணி வரை மட்டுமே உள்ளது. வழக்கமாக வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரமும் பெளர்ணமியும் இணைந்து வரும் நாளில் தான் வைகாசி விசாகம் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு விசாகம் நட்சத்திரம் ஜூன் 09ம் தேதியும், பெளர்ணமி திதி ஜூன் 10ம் தேதி வருகிறது. இதனால் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் நட்சத்திரம் வரும் ஜூன் 09ம் தேதியையே வைகாசி விசாகம் நாளாக கொண்டாடுகிறோம்.




வைகாசி விசாகம் அன்று மாலை 04.40 மணியுடன் விசாகம் நட்சத்திரம் முடிந்து விடும் என்பதால் காலையிலேயே முருகப் பெருமான் வழிபாட்டினை செய்வது விசேஷம். வீட்டில் முருகப் பெருமான் விக்ரஹம் அல்லது வேல் வைத்திருப்பவர்கள் பால், பன்னீர், சந்தனம், தேன் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் பாலை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு ஏதாவது இனிப்பு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.


சர்க்கரை பொங்கல், அப்பம், தேன், திணை மாவு ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். அதை விட முக்கியமாக முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமான ஒரு பொருளை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நாம் முருகப் பெருமானிடம் வைக்கும் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். வைகாசி விசாகம் அன்று வெல்லம் வாங்கி வந்து, அதில் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்தம் படைத்து வழிபட வேண்டும். இது முருகப் பெருமானுக்கு மிக மிக பிடித்த பிரசாதம் ஆகும். பஞ்சாமிர்தம் படைத்து வழிபடுபவர்களின் வாழ்க்கையை இனிமையாக முருகப் பெருமான் மாற்றி அருள்வார் என்பது நம்பிக்கை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்