சென்னை : முருகப் பெருமான் அவதரித்தது வைகாசி மாதம் விசாகம் நட்சத்தரத்தில் என புராணங்கள் சொல்கின்றன. இதனால் இது முருகப் பெருமானுக்குரிய தினமாக கருதி வைகாசி விசாகம் பெருவிழாவாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பால் குடம் ஏந்தியும், காவடி எடுத்தும் வந்து நேரத்திக்கடன் நிறைவேற்றுவார்கள். வைகாசி விசாகம் அன்று, சிவ பெருமானின் நெற்றிக் கணக்கில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து உதித்த முருகப் பெருமானின் மனம் குளிர பால் அபிஷேகம் செய்வதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஜூன் 09ம் தேதி திங்கட்கிழமையான இன்று வைகாசி விசாகம் அமைந்துள்ளது. ஜூன் 08ம் தேதி பகல் 2 மணிக்கே விசாகம் நட்சத்திரம் துவங்கி, ஜூன் 09ம் தேதி மாலை 04.40 மணி வரை மட்டுமே உள்ளது. வழக்கமாக வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரமும் பெளர்ணமியும் இணைந்து வரும் நாளில் தான் வைகாசி விசாகம் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு விசாகம் நட்சத்திரம் ஜூன் 09ம் தேதியும், பெளர்ணமி திதி ஜூன் 10ம் தேதி வருகிறது. இதனால் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் நட்சத்திரம் வரும் ஜூன் 09ம் தேதியையே வைகாசி விசாகம் நாளாக கொண்டாடுகிறோம்.

வைகாசி விசாகம் அன்று மாலை 04.40 மணியுடன் விசாகம் நட்சத்திரம் முடிந்து விடும் என்பதால் காலையிலேயே முருகப் பெருமான் வழிபாட்டினை செய்வது விசேஷம். வீட்டில் முருகப் பெருமான் விக்ரஹம் அல்லது வேல் வைத்திருப்பவர்கள் பால், பன்னீர், சந்தனம், தேன் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் பாலை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு ஏதாவது இனிப்பு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
சர்க்கரை பொங்கல், அப்பம், தேன், திணை மாவு ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். அதை விட முக்கியமாக முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமான ஒரு பொருளை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நாம் முருகப் பெருமானிடம் வைக்கும் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். வைகாசி விசாகம் அன்று வெல்லம் வாங்கி வந்து, அதில் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்தம் படைத்து வழிபட வேண்டும். இது முருகப் பெருமானுக்கு மிக மிக பிடித்த பிரசாதம் ஆகும். பஞ்சாமிர்தம் படைத்து வழிபடுபவர்களின் வாழ்க்கையை இனிமையாக முருகப் பெருமான் மாற்றி அருள்வார் என்பது நம்பிக்கை.
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}