தவ யோகி விவேகானந்தரும், தமிழ்ப் பெரும் புலவர் திருவள்ளுவரும்.. கன்னியாகுமரியின் இரு கண்கள்..!

May 30, 2024,09:48 PM IST
நாகர்கோவில்:   கன்னியாகுமரிக்கு வருவோர் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இரு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்குப் போகாவிட்டால் அவர்களது கன்னியாகுமரி பயணம் கண்டிப்பாக நிறைவு பெறாது.

தமிழ்நாட்டின் தென் கோடி முனைதான் கன்னியாகுமரி. அதற்கும் அப்பால் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. அது கடலுக்கு அடியில் போய் விட்டதாக நம்பப்படுகிறது. அதை லெமூரியா கண்டம் என்றும் அழைக்கிறார்கள்.  தமிழர்களின் கலாச்சாரம், நாகரீகம் அங்கு தழைத்தோங்கி, செழித்து விளங்கியதாகவும் நம்பப்படுகிறது.

வங்கக் கடல், அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெரும் சமுத்திரங்களும் சங்கமிப்பது இங்குதான். இந்தியாவின் தென் கோடி எல்லையும் குமரிதான். கேப் கொமரின் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட குமரி முனை வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் மிக முக்கியமான ஊராகும்.  மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது கன்னியாகுமரி.



பழமை வாய்ந்த தேவாலயங்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், அழகான கடற்கரை, அட்டகாசமான சூரிய உதயம் வரிசையில் முக்கிமயான இன்னும் இரு விஷயங்கள் - விவேகானந்தர் நினைவு தியான மண்டபம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலை.

குமரி முனையில் கடற்கரையிலிருந்து சற்று தள்ளி கடலில் இரண்டு பிரமாண்ட பாறைகள் உள்ளன. அதில் ஒன்றில்தான் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. மற்றொரு பாறையில் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை உள்ளது. இரண்டும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. 

1892ம் ஆண்டு விவேகானந்தர் குமரி முனைக்கு வந்தார். இப்போது மண்டபம் அமைந்துள்ள பாறையில்தான் அவர் டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டார். இந்தப் பாறைக்கு ஸ்ரீபாத பாறை என்றும் பெயரிட்டுள்ளனர். இங்கு மேற்கொண்ட தியானத்தால்தான் அவருக்குள் பெரும் எழுச்சியும், ஞானமும் பிறந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் இந்தப் பாறை பிரபலமானது, இங்கு தியான மண்டபமும் அமைக்கப்பட்டது. கன்னியாகுமரிக்கு வருவோர் இங்கும் கட்டாயம் வருவார்கள். தியானம் மேற்கொள்வார்கள்.



இந்த மண்டபத்திற்கு சற்று தொலைவில் கடலில் உள்ள இன்னொரு பாறையில் கம்பீரமாக நிற்கிறார் நமது தமிழ்ப் புலவர் திருவள்ளுவனார். 2000மாவது ஆண்டு ஜனவரி 1ம் தேதி இந்த சிலை திறக்கப்பட்டது. மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. பீடம் மற்றும் சிலையின் உயரம் மொத்தம் 133 அடியாகும். அதாவது 133 அத்தியாயங்களைக் குறிக்கும் வகையில் இந்த உயரம் திட்டமிடப்பட்டது. முழுமையாக இந்திய கட்டடக் கலை பாணியில் உருவாக்கப்பட்ட சிலை இது. குமரிக்கு வருவோர் தவறாமல் செல்லும் இடமாக திருவள்ளுவர் சிலையும் ஒன்று.

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் கன்னியாகுமரிக்கு தனி இடம் உண்டு. இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பல நாட்டுக்காரர்களும் இங்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்