ஆண்டிப்பட்டி : தமிழக அரசியல்கட்சிகள் கூட்டணி பற்றி பேசி வரும் நிலையில், அதிமுக-பாஜக கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையே துவக்கி விட்டார்கள். நேற்று நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி - பியூஷ் கோயல் ஆலோசனை பற்றி பல்வேறு தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் அதிமுக கூட்டணியில் தினகரனின் அமமுக.,விற்கு 6 சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது.
அதிமுக-பாஜக கூட்டணியில் விரைவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணைய போவதாக தகல்கள் வெளியாகி வருகிறது. தேர்தல் கூட்டணி குறித்த பல்வேறு யூகங்கள் நிலவி வரும் சூழலில் இந்த தகவல்கள் குறித்து டிடிவி தினகரனிடமே நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது. ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில், "ஆண்டிப்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் தான் கண்டிப்பாகப் போட்டியிடுவார். நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், இந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றார். மேலும், "எங்களுக்கு எந்தக் கூட்டணி வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம்" எனக் கூறினார்.

சமீபகாலமாக அதிமுக கூட்டணியில் அமமுக இணையப் போவதாகவும், அவர்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை முற்றிலுமாக மறுத்த டிடிவி தினகரன், "கூட்டணியே இன்னும் அமையாத போது, தொகுதிகள் ஒதுக்கீடு என்பது வெறும் வதந்தி" என்று தெளிவுபடுத்தினார்.மேலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் கட்டமைப்பு மிகவும் பலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியதாக தினகரன் அறிவித்தார். தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லாத நிலையில், வரும் நாட்களில் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.தற்போதைய சூழலில், அதிமுக மற்றும் பாஜக இடையே தொதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
தாயன்பு !
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
Kalaiyarasi Muthuvel Poems: பார்வை.. யாருக்குள் யார்.. சாபம்..!
சிந்தனைச் சிதறல்.. நம்மில் ஏற்படும் மாற்றமே நிலையானது!
{{comments.comment}}