சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவைத் தாண்டிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலனுக்கு என்னாச்சு என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல்தான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினி உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் ரஜினிகாந்த்தின் இதயத்திற்குச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்ததால் அதைச் சரி செய்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரஜினிகாந்த்துக்கு இதய ரீதியிலான பிரச்சினை ஏற்பட்டது உறுதியானது.
இந்த நிலையில் அப்பல்லோ அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து தற்போது விஜய் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}