சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவைத் தாண்டிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலனுக்கு என்னாச்சு என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல்தான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினி உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் ரஜினிகாந்த்தின் இதயத்திற்குச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்ததால் அதைச் சரி செய்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரஜினிகாந்த்துக்கு இதய ரீதியிலான பிரச்சினை ஏற்பட்டது உறுதியானது.
இந்த நிலையில் அப்பல்லோ அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து தற்போது விஜய் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
{{comments.comment}}