சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவைத் தாண்டிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலனுக்கு என்னாச்சு என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல்தான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினி உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் ரஜினிகாந்த்தின் இதயத்திற்குச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்ததால் அதைச் சரி செய்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரஜினிகாந்த்துக்கு இதய ரீதியிலான பிரச்சினை ஏற்பட்டது உறுதியானது.
இந்த நிலையில் அப்பல்லோ அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து தற்போது விஜய் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}