நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக மத்திய அரசை கண்டித்து.. தமிழக எம்பிக்கள் கண்டனம் முழக்க போராட்டம்!

Mar 11, 2025,05:18 PM IST

டெல்லி:   தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து இன்று இரண்டாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.


நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் இரண்டாவது அமர்வு நேற்று நடைபெற்ற நிலையில் அக்கூட்டத்தில், தமிழக எம்பிக்கள் தமிழகத்திற்கு நீதி வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் கூச்சல் நீடித்தது. இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என கூறியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. இதனால் தமிழ்நாட்டு எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




இருப்பினும், தமிழகத்திற்கு நிதியை தராமல் ஏமாற்றம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவமான பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல்  தமிழ்நாட்டின் மொழியோடும், கல்வியோடும், உரிமையோடும், விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்‌. டெல்லியில் இருந்து ஆள்வதால் ஏதோ அவர் நமக்கு மேல் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் என   தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 


இந்த நிலையில்,  இந்தி திணிப்பு மற்றும் கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாட்டு எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம்  நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவை தொடங்கியதுமே இன்றும் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டு எம்பிக்கள் கண்டன முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‌இந்தியை ஏற்கமாட்டோம்.. மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்...என தொடர் முழக்கமிட்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


இதில் திருமாவளவன், வைகோ, கனிமொழி, டி.ஆர் பாலு, என்.ஆர் இளங்கோ, நவாஸ் கனி ராபர்ட் புரூஸ், தமிழச்சி தங்கபாண்டியன், உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் கருப்புச்சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.


இதற்கிடையே நாடாளுமன்ற அவையில், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூபாய் 2,152 கோடியை ஒன்றிய அரசு தர மறுப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும். மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த வேண்டும். கல்வி நிதியை தர மறுப்பதால் தமிழ்நாட்டில் 40 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ‌ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாக உள்ளது. என திமுக எம்பி வில்சன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்