டெல்லி: தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து இன்று இரண்டாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் இரண்டாவது அமர்வு நேற்று நடைபெற்ற நிலையில் அக்கூட்டத்தில், தமிழக எம்பிக்கள் தமிழகத்திற்கு நீதி வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் கூச்சல் நீடித்தது. இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. இதனால் தமிழ்நாட்டு எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தமிழகத்திற்கு நிதியை தராமல் ஏமாற்றம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவமான பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழ்நாட்டின் மொழியோடும், கல்வியோடும், உரிமையோடும், விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம். டெல்லியில் இருந்து ஆள்வதால் ஏதோ அவர் நமக்கு மேல் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தி திணிப்பு மற்றும் கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாட்டு எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவை தொடங்கியதுமே இன்றும் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டு எம்பிக்கள் கண்டன முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியை ஏற்கமாட்டோம்.. மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்...என தொடர் முழக்கமிட்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதில் திருமாவளவன், வைகோ, கனிமொழி, டி.ஆர் பாலு, என்.ஆர் இளங்கோ, நவாஸ் கனி ராபர்ட் புரூஸ், தமிழச்சி தங்கபாண்டியன், உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் கருப்புச்சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே நாடாளுமன்ற அவையில், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூபாய் 2,152 கோடியை ஒன்றிய அரசு தர மறுப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும். மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த வேண்டும். கல்வி நிதியை தர மறுப்பதால் தமிழ்நாட்டில் 40 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாக உள்ளது. என திமுக எம்பி வில்சன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}