மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று மதுரை வருகிறார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாயக்கர் பட்டி, அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 48 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவை குளிர்காலகூட்டத் தொடரில் டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல் அரிட்டாப்பட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரை மட்டும் தவிர்த்து பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த போராட்டத்திற்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.இந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாகவும் அறிவித்தது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, மத்திய அரசு ரத்து முடிவை எடுக்கக் காரணமாக அமைந்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 26ம் தேதி அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அரிட்டாபட்டிக்கு வந்த முதல்வர் அங்கு மக்கள் பிரதநிதிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களை சந்திக்க உள்ளார். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று மாலை நடைபெறவிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}