மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று மதுரை வருகிறார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாயக்கர் பட்டி, அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 48 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவை குளிர்காலகூட்டத் தொடரில் டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல் அரிட்டாப்பட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரை மட்டும் தவிர்த்து பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த போராட்டத்திற்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.இந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாகவும் அறிவித்தது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, மத்திய அரசு ரத்து முடிவை எடுக்கக் காரணமாக அமைந்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 26ம் தேதி அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அரிட்டாபட்டிக்கு வந்த முதல்வர் அங்கு மக்கள் பிரதநிதிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களை சந்திக்க உள்ளார். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று மாலை நடைபெறவிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
யார் மனிதன்?
Short Story: கல்விக் கண்
Tamil Poem: தமிழில் பிறமொழிக் கலப்பு சரியா, தவறா???
An Extension, Not a Beginning.. 2வது இளவரசனை இப்படித்தான் வரவேற்றோம்!
National Film awards 2024: 72வது தேசிய திரைப்பட விருதுகள்.. அமரனுக்கு 3.. மம்முட்டி சிறந்த நடிகர்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
{{comments.comment}}