டெல்லி: தமிழக சட்டமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்தி அமைச்சர் பியுஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் இணை பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது, பாஜகவைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. மேலும் சில கட்களுடன் கூட்டணியில் இணைக்க பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இணை பொறுப்பாளர்களாக மத்திய சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மத்திய விமான போக்குவரத்துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜெய்ந்த் பாண்டா நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!
DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி
C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!
234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!
Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!
முதல் தோட்டா.....!
{{comments.comment}}