டெல்லி: தமிழக சட்டமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்தி அமைச்சர் பியுஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் இணை பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது, பாஜகவைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. மேலும் சில கட்களுடன் கூட்டணியில் இணைக்க பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இணை பொறுப்பாளர்களாக மத்திய சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மத்திய விமான போக்குவரத்துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜெய்ந்த் பாண்டா நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை
விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி
பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை
பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்
ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்
தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!
தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்
{{comments.comment}}