டெல்லி: தமிழக சட்டமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்தி அமைச்சர் பியுஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் இணை பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது, பாஜகவைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. மேலும் சில கட்களுடன் கூட்டணியில் இணைக்க பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இணை பொறுப்பாளர்களாக மத்திய சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மத்திய விமான போக்குவரத்துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜெய்ந்த் பாண்டா நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூரில் தேர்தல் பிரச்சாரச் சம்பவத்தின் போது நடந்தது என்ன? .. விளக்கிய முதல்வர் விஜய்
ஓடு ஓடு ஓடுன்னு.. திருச்சி ஏர்போர்ட்டுக்கு ஓடியது யார்?.. முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி
கரூரில்.. 31 பேருக்கு பணியிட ஆணை வழங்கிய முதல்வர் விஜய்.. யார் யாருக்கு எங்கு பணி?
தேர்தல் வழக்கு எதிரொலி.. திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தத் தடை
Nature: It Is Beautiful.. இயற்கை அழகானது!
Rose Garden.. ரோஜா ரோஜா!
நல்லதுக்காக பொய் சொல்லலாம்.. தப்பே இல்லை!
Work hard in silence.. வெற்றி சத்தமாக பேசட்டும்!
True Friends Force you grow.. நல்ல நண்பர்கள் இருந்தால்...!
{{comments.comment}}