எச்டிஎப்சி வாடிக்கையாளர்களே.. நவம்பர் 5, 23.. யுபிஐ சேவை இயங்காது.. பார்த்துக்கங்க!

Nov 04, 2024,06:09 PM IST

சென்னை:   பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 5 மற்றும் நவம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் UPI சேவை இயங்காது என்று ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி அறிவித்துள்ளது.


UPI என்பது Unified Payments Interface என்பதன்  சுருக்கம். இதன் மூலம்  தங்களின் ஸ்மார்ட்போன் வழியாக எளிய முறையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். ஒரு நாளைக்கு  அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் அனுப்பலாம்.




ஆன்லைன் பரிவர்த்தனை என்பது தற்போது மக்களிடம் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. ஏனெனில் மக்கள் சிறிய பொருள் முதல் தள்ளுவண்டிக் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் வரை அனைத்திற்கும் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்வதையே விரும்புகின்றனர். ஏனெனில் நேரடியாக பணத்தை கையாளுவதை தவிர்த்து ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்துவதை பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். இதனால் ஆன்லைன் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


பொதுவாகவே தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்குச் சென்றால் நாம் வாங்க போகும் பொருட்கள் இருக்கிறதா என கேட்பதை தவிர்த்து,  உங்கள்  கடையில் gpay, பேடிஎம் இருக்கா என கேட்டு தான் கடைகளுக்குள்ளேயே செல்கிறார்கள். அதுமட்டுமின்றி தற்போது இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆடை அணிகலன் முதல் உணவுகள் வரை ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் UPI மிகவும் உதவிகரமாக உள்ளது. அந்த அளவுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது.


இந்த நிலையில் ஹெச்டிஎப்சி வங்கி பராமரிப்பு பணி காரணமாக தனது ஆன்லைன் பரிவர்த்தனை சேவையை நவம்பர் ஐந்து மற்றும் நவம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாளுக்கு இயங்காது என  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 5ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை 2 மணி நேரமும், நவம்பர் 23ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் 3 மணி வரை மூன்று மணி நேரமும் என இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக பரிவர்த்தனைகள் இயங்காது.


HDFC mobile banking app, மற்றும் எச்டிஎப்சியுடன் இணைக்கப்பட்டுள்ள  GPay, Paytm, phone pay, WhatsApp pay போன்ற எவ்வித ஆப்களும் இயங்காது. யுபிஐ சேவைகள் மட்டுமே வேலை செய்யாது தவிர மற்றபடி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகள் இயங்கும் என ஹெச்டிஎஃப்சி வங்கி  இணையதளத்தில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்