வாஷிங்டன்: உலகளாவிய வரிகளை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபரின் சட்ட அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்று சொலிசிட்டர் ஜெனரல் ஜான் சாவர் கூறியுள்ளார். அதிபரின் வரிகள் தொடர்பான முழு சட்ட நிலையும் கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக அதிபர் டிரம்ப், சரமாரியாக உலக நாடுகளுக்கு எதிராக விதித்து வந்த வரிகள் அவரது அதிகாரத்தை மீறிய செயல் என்று கீழமை நீதிமன்றம் கூறி, அந்த வரிவிதிப்புக்குத் தடை விதித்திருந்தது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் இந்த வரிகளை விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம், அரசு மறு ஆய்வு செய்ய கால அவகாசம் அளிக்கும் வகையில், அக்டோபர் நடுப்பகுதி வரை வரிகள் அமலில் இருக்கும் என்று கூறியுள்ளது.
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
{{comments.comment}}