இந்தியா மீதான 50% வரியை எதிர்த்த உத்தரவு.. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு

Sep 04, 2025,04:44 PM IST

வாஷிங்டன்: உலகளாவிய வரிகளை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.


அமெரிக்க அதிபரின் சட்ட அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்று சொலிசிட்டர் ஜெனரல் ஜான் சாவர் கூறியுள்ளார். அதிபரின் வரிகள் தொடர்பான முழு சட்ட நிலையும் கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.




முன்னதாக அதிபர் டிரம்ப், சரமாரியாக உலக நாடுகளுக்கு எதிராக விதித்து வந்த வரிகள் அவரது அதிகாரத்தை மீறிய செயல் என்று கீழமை நீதிமன்றம் கூறி, அந்த வரிவிதிப்புக்குத் தடை விதித்திருந்தது.  அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் இந்த வரிகளை விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம், அரசு மறு ஆய்வு செய்ய கால அவகாசம் அளிக்கும் வகையில், அக்டோபர் நடுப்பகுதி வரை வரிகள் அமலில் இருக்கும் என்று கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாங்கள் யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை..தவெக திட்டவட்டம்

news

முதல் நாளிலேயே ரூ.1.26 கோடி பறிமுதல்...தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்

news

சிபிஐ-க்கு விஜய் கடிதம்: விசாரணையை சென்னையில் நடத்த கோரிக்கை

news

தமிழ்நாடு - புதுச்சேரியில் வெவ்வேறு தேதிகளில் தேர்தல்; புதுவையில் வேட்புமனு தாக்கல் துவக்கம்

news

"என்ன மீரா... ஒரு மாதிரியா பார்க்குற?".. (நீ மழை - 6)

news

யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்

news

ஆஸ்கர் 2026 விருது பெற்றவர்களின் முழு பட்டியல்

news

Monday Motivation: நரியும் திராட்சையும்!

news

மதுரை அரசரடியில்.. சாலைப் பராமரிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் அவதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்