வாஷிங்டன்: உலகளாவிய வரிகளை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபரின் சட்ட அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்று சொலிசிட்டர் ஜெனரல் ஜான் சாவர் கூறியுள்ளார். அதிபரின் வரிகள் தொடர்பான முழு சட்ட நிலையும் கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக அதிபர் டிரம்ப், சரமாரியாக உலக நாடுகளுக்கு எதிராக விதித்து வந்த வரிகள் அவரது அதிகாரத்தை மீறிய செயல் என்று கீழமை நீதிமன்றம் கூறி, அந்த வரிவிதிப்புக்குத் தடை விதித்திருந்தது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் இந்த வரிகளை விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம், அரசு மறு ஆய்வு செய்ய கால அவகாசம் அளிக்கும் வகையில், அக்டோபர் நடுப்பகுதி வரை வரிகள் அமலில் இருக்கும் என்று கூறியுள்ளது.
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
{{comments.comment}}