நியூயார்க் : அமெரிக்கா முழுவதும் இன்ஃபுளுயன்சா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் தற்காப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. குளிர் காலத்தில் வழக்கமாக பரவும் இந்த வைரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிற்கு வந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தற்போது உலகம் முழுவதும் இன்ஃபுளுயன்சா வைரஸ் வேகமாக பரவி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் குளிர் காலம் துவங்குவதற்கு முன்பாகவே இந்த வைரஸ் வேகமாக பரவ துவங்கி உள்ளது.

2019-2020 காலத்தை போலவே இந்த ஆண்டும் புத்தாண்டை ஒட்டி ஃபுளு அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.இவற்றில் அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் இன்ஃபுளுயன்சா மிக அதிகமாக பரவி வருதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு குளிர்கால ஃப்ளு சீசனின் போது உச்சம் தொட்ட நிலையில், இந்த ஆண்டும் அதிகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 251 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற நிலையில், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இன்ஃபுளுயன்சா சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். இன்ஃபுளுயன்சா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பது உண்மை தான். ஆனால் மீண்டும் கொரோனா போன்ற அளவிற்கு பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்ஃபுளுயன்சா பரவல் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கழிவுநீர் வழியாகவே அதிகமான வைரஸ்கள் பரவுவதால் மக்கள் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மிட்வெஸ்ட், இண்டியானா போன்ற பகுதிகளில் கோவிட் 19 பாதிப்பு அதிகமாக இருந்ததால் இன்ஃபுளுயன்சா பாதிப்பு அதிகம் வரலாம் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}