அமெரிக்காவில் வேகமாக பரவும் இன்ஃபுளுயன்சா வைரஸ்.. வழக்கமாக குளிர் காலத்தில் பரவுவதுதானாம்!

Jan 05, 2025,04:05 PM IST

நியூயார்க் : அமெரிக்கா முழுவதும் இன்ஃபுளுயன்சா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் தற்காப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. குளிர் காலத்தில் வழக்கமாக பரவும் இந்த வைரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிற்கு வந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தற்போது உலகம் முழுவதும் இன்ஃபுளுயன்சா வைரஸ் வேகமாக பரவி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் குளிர் காலம் துவங்குவதற்கு முன்பாகவே இந்த வைரஸ் வேகமாக பரவ துவங்கி உள்ளது.




2019-2020 காலத்தை போலவே இந்த ஆண்டும் புத்தாண்டை ஒட்டி  ஃபுளு அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.இவற்றில் அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் இன்ஃபுளுயன்சா மிக அதிகமாக பரவி வருதாக சொல்லப்படுகிறது.


கடந்த ஆண்டு குளிர்கால ஃப்ளு சீசனின் போது உச்சம் தொட்ட நிலையில், இந்த ஆண்டும் அதிகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 251 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற நிலையில், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இன்ஃபுளுயன்சா சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். இன்ஃபுளுயன்சா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பது உண்மை தான். ஆனால் மீண்டும் கொரோனா போன்ற அளவிற்கு பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


அதே சமயம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்ஃபுளுயன்சா பரவல் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கழிவுநீர் வழியாகவே அதிகமான வைரஸ்கள் பரவுவதால் மக்கள் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மிட்வெஸ்ட், இண்டியானா போன்ற பகுதிகளில் கோவிட் 19 பாதிப்பு அதிகமாக இருந்ததால் இன்ஃபுளுயன்சா பாதிப்பு அதிகம் வரலாம் என சொல்லப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பு.. எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது!

news

Monday Motivation: வாரீர்! வாரீர்!! பிள்ளைகாள்.. இலக்கணம் எளிதே தமிழ் இலக்கணம் எளிதே!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்