லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ அருகே பஸ்ஸும், பால் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 19க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பீகார் மாநிலம் சீதாமார்ஹி என்ற இடத்திலிருந்து டெல்லி நோக்கி ஒரு டபுள் டெக்கர் பஸ் வந்து கொண்டிருந்தது. அதே திசையில் பால் வண்டி ஒன்று பஸ்ஸுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது. இன்று காலை உன்னாவோ அருகே இரு வாகனங்களும் போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி மீது பஸ் வேகமாக மோதியது.

இதில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் படு வேகமாக மோதியதால் தூக்கி எறியப்பட்டது. அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. உடைந்து கிடந்த கண்ணாடித் துகள்கள், தூக்கி வீசப்பட்ட பயணிகளின் பொருட்கள், சூட்கேஸ்கள், உடல்கள் என அந்த இடமே கோரமாக காணப்பட்டது.
அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை. முன்னால் போய்க் கொண்டிருந்த லாரியை பஸ் ஓவர் டேக் செய்ய முயன்றபோது விபத்து நேரிட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
காயமடைந்த பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
{{comments.comment}}