லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ அருகே பஸ்ஸும், பால் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 19க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பீகார் மாநிலம் சீதாமார்ஹி என்ற இடத்திலிருந்து டெல்லி நோக்கி ஒரு டபுள் டெக்கர் பஸ் வந்து கொண்டிருந்தது. அதே திசையில் பால் வண்டி ஒன்று பஸ்ஸுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது. இன்று காலை உன்னாவோ அருகே இரு வாகனங்களும் போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி மீது பஸ் வேகமாக மோதியது.
இதில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் படு வேகமாக மோதியதால் தூக்கி எறியப்பட்டது. அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. உடைந்து கிடந்த கண்ணாடித் துகள்கள், தூக்கி வீசப்பட்ட பயணிகளின் பொருட்கள், சூட்கேஸ்கள், உடல்கள் என அந்த இடமே கோரமாக காணப்பட்டது.
அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை. முன்னால் போய்க் கொண்டிருந்த லாரியை பஸ் ஓவர் டேக் செய்ய முயன்றபோது விபத்து நேரிட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
காயமடைந்த பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}