டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 18 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி, பேருந்து மேட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

காயமடைந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
காவல்துறை, நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புப் படையின் உயர் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். விபத்து தொடர்பாக வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று நிர்வாகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!
{{comments.comment}}