டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 18 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி, பேருந்து மேட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
காயமடைந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
காவல்துறை, நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புப் படையின் உயர் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். விபத்து தொடர்பாக வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று நிர்வாகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பரபரப்பைக் கிளப்பும் போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது!
Happy News: இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி.. தமிழ்நாடு அரசு அதிரடி திட்டம்!
கட்சியினரை கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?: எடப்பாடி பழனிச்சாமி!
பிளாஸ்டிக்கிற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நல்லது...ஏன் தெரியுமா?
இந்த 5 ராசிக்காரர்களின் உறவை அவ்வளவு எளிதில் உங்களால் வெட்டிக் கொள்ள முடியாது!
6 மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு... நீலகிரி மற்றும் கோவைக்கு ஆரஞ்ச் அலா்ட்!
மஞ்சள் பூசணி விதைகள் .. ஆரோக்கிய நன்மை தரும் Yellow Pumpkin seeds
2026 மட்டுமில்ல 2031 மற்றும் 2036 லும் திமுக தான் வெல்லும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!
திமுக அரசு மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் துரோகம் செய்து வருகிறது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}