உத்தரகண்ட் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி.. 10 பேர் மாயம்!

Jun 26, 2025,10:43 AM IST

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 18 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். 


காவல்துறை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


முதற்கட்ட தகவலின்படி, பேருந்து மேட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். 




காயமடைந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.


காவல்துறை, நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புப் படையின் உயர் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். விபத்து தொடர்பாக வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று நிர்வாகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!

news

ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!

news

தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!

news

தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி

news

SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?

news

குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை

news

ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

news

இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்