வ. துர்காதேவி
கயல்விழிகளல்ல,
கருணை பொங்கும் கண்களே அழகென்பதை
ரோஜா நிற இதழ்களல்ல,
மலர்ச்சியாய் புன்னகைக்கும் இதழ்களே அழகென்பதை
சங்கு கழுத்தல்ல,
சத்தியத்திற்கு மட்டுமே தலை வணங்கும் கழுத்தே அழகென்பதை...
வெள்ளாவியில் வெளுத்த தோல் அல்ல,
பிறர் துன்பம் கண்டு துடிக்கும் சதையே அழகென்பதை....

தங்க முலாமிட்ட அங்கங்களல்ல,
அதன் பின்னே மௌனமாய் வீற்றிருக்கும் தூய மனதே அழகென்பதை....
வாழைத்தண்டு கால்களல்ல,
ஓயாமல் ஓடி உழைக்கும் திடமான கால்களே அழகென்பதை
காலம் காலமாய்
பொய் கவி புனையும்
கவிஞர் கூட்டத்துடன்,
இன்றைய AI உலகமும்
கண்மூடித் திணிக்கும்
இக்கணம் முதலே
(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}