வா.. பெண்ணே.. அழகின் வரையறையை மாற்றுவோம்!

Jan 16, 2026,04:30 PM IST

வ. துர்காதேவி


கயல்விழிகளல்ல, 

கருணை பொங்கும் கண்களே அழகென்பதை


ரோஜா நிற இதழ்களல்ல,

மலர்ச்சியாய் புன்னகைக்கும் இதழ்களே அழகென்பதை


சங்கு கழுத்தல்ல,

சத்தியத்திற்கு மட்டுமே தலை வணங்கும் கழுத்தே அழகென்பதை...


வெள்ளாவியில் வெளுத்த தோல் அல்ல, 

பிறர் துன்பம் கண்டு துடிக்கும் சதையே அழகென்பதை....




தங்க முலாமிட்ட அங்கங்களல்ல,

அதன் பின்னே மௌனமாய் வீற்றிருக்கும் தூய மனதே அழகென்பதை....


வாழைத்தண்டு கால்களல்ல,

ஓயாமல் ஓடி உழைக்கும் திடமான கால்களே அழகென்பதை


காலம் காலமாய்

பொய் கவி புனையும்

கவிஞர் கூட்டத்துடன்,

இன்றைய AI உலகமும்

கண்மூடித் திணிக்கும்

அழகின் வரையறையை

மாற்றுவோம் நாம்

இக்கணம் முதலே


(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

news

Heritage day.. தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்.. கொண்டாடுவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்