யாராகப் பிறக்க ஆசை?

May 02, 2026,02:09 PM IST

- வே. ஜெயந்தி


கடவுள் தந்த இந்த மேடையில்,

நான் நானாகப் பிறக்க ஆசை.


பிறர் பாராட்டும் குணமுடன்,

பாசமாய் வாழ்ந்திட ஆசை.


அனைவரும் விரும்பும் மனதுடன்,

அன்பை பகிர்ந்திட ஆசை

.

அழகான முகம் மட்டுமல்ல,

அழகான உள்ளம் பெற ஆசை.




பொய்யின்றி வாழும் பாதையில்,

உண்மையை சொல்லிட ஆசை.


பிறர் நலனில் சந்தோஷம் காணும்

நல்ல உள்ளம் ஆக ஆசை.


யாராகவும் அல்ல இந்த வாழ்வில்,

நான் நானாக இருப்பதே ஆசை.


(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்