கோயம்பேடு மார்க்கெட்டுக்கு.. காய்கறி வரத்து குறைந்தது.. கிடுகிடுவென உயர்கிறது விலை..!

May 13, 2024,05:46 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


சென்னை உள்ள முக்கிய மார்க்கெட்டாக கோயம்பேடு உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறி கொண்டு வரப்பட்டடு விற்பனை செய்யப்படுகிறது. 295 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சந்தை ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தையாகும். இந்த சந்தை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை மொத்த சந்தையாகவும், அதனைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் இரவு வரை சில்லறை விற்பனையும் நடைபெறுகிறது. 


தினமும் இந்த சந்தைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நாள் ஒன்றிற்கு வந்து செல்கின்றனர்.நாள் ஒன்றுக்கு 500 முதல் 700க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மார்கெட்டில் காய்கறிகளின் விலை தினமும் வரத்திற்கு ஏற்றார் போல் நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. தற்போது பல இடங்களில் கோடை வெளியில் தாக்கம் அதிகமாக இருப்பதினால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. 




தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பத்தால் பயிர் சேதம் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கேயம்பேடு வரும் காய்கறிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.


ஒரு கிலோ பீன்ஸ் நேற்று ரூ.120க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.220 முதல் ரூ.240க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் ரூ. 50க்கு  விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 70க்கும், ஒரு கிலோ அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.110க்கும், ஒரு கிலோ சேனைக்கிழங்கு ரூ. 80 மற்றும் ரூ.90க்கும் விற்கப்படுகிறது.ஒரு கிலோ எலுமிச்சை ரூ.70க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.160க்கும் விற்கப்படுகிறது.ஒரு கிலோ பூண்டு ரூ. 250க்கு விற்கப்பட்டது இன்று ரூ.280க்கும், ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.20க்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.30க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.40க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ.28க்கும் விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

news

என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா

news

சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்

news

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

news

மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)

news

பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

news

மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?

அதிகம் பார்க்கும் செய்திகள்