சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை உள்ள முக்கிய மார்க்கெட்டாக கோயம்பேடு உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறி கொண்டு வரப்பட்டடு விற்பனை செய்யப்படுகிறது. 295 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சந்தை ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தையாகும். இந்த சந்தை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை மொத்த சந்தையாகவும், அதனைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் இரவு வரை சில்லறை விற்பனையும் நடைபெறுகிறது.
தினமும் இந்த சந்தைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நாள் ஒன்றிற்கு வந்து செல்கின்றனர்.நாள் ஒன்றுக்கு 500 முதல் 700க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மார்கெட்டில் காய்கறிகளின் விலை தினமும் வரத்திற்கு ஏற்றார் போல் நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. தற்போது பல இடங்களில் கோடை வெளியில் தாக்கம் அதிகமாக இருப்பதினால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பத்தால் பயிர் சேதம் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கேயம்பேடு வரும் காய்கறிகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
ஒரு கிலோ பீன்ஸ் நேற்று ரூ.120க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.220 முதல் ரூ.240க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் ரூ. 50க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 70க்கும், ஒரு கிலோ அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.110க்கும், ஒரு கிலோ சேனைக்கிழங்கு ரூ. 80 மற்றும் ரூ.90க்கும் விற்கப்படுகிறது.ஒரு கிலோ எலுமிச்சை ரூ.70க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.160க்கும் விற்கப்படுகிறது.ஒரு கிலோ பூண்டு ரூ. 250க்கு விற்கப்பட்டது இன்று ரூ.280க்கும், ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.20க்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.30க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.40க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ.28க்கும் விற்கப்படுகிறது.
Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா
10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!
10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931
The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!
{{comments.comment}}