கொல்கத்தா பாலியல் வழக்கு.. சாட்சியைக் கலைத்ததே மமதா பானர்ஜிதான்.. பெண்ணின் தந்தை புகார்!

Jan 21, 2025,07:07 PM IST

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ சிறப்பாக கையாளவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளை கலைத்ததே மமதா பானர்ஜிதான் என்று மாணவியின் தந்தை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி பயிற்சி பெண் மருத்துவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நாடு தழுவிய போராட்டமும் நடைபெற்றது. 




இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களின் மருத்துவ சேவைகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய்க்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நிரூபித்தது. 


இதனால், சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் சியால்டா சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனையடுத்து குற்றவாளி சஞ்சய் ராயை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்தும், குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது நீதிமன்றம். இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என மரண தண்டனை விதிக்கப்படாததற்கு என்று நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.


இந்நிலையில், வழக்கை சிபிஐ சிறப்பாக கையாளவில்லை என கொல்கத்தா முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றசாட்டியிருந்தார். நாங்கள் விசாரித்திருந்தால் மரண தண்டனை வாங்கிக் கொடுத்திருப்போம் என்றும் கூறிய மமதா பானர்ஜி, தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.


இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தை, முதல்வர் மமதா மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், முதல்வர் மமதா பானர்ஜியும், அவரது அரசும்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளை, ஆதராங்களை அழித்தது. எங்களுக்கு தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்போம். இதுவரை முதல்வர் மமதா பானர்ஜி செய்தது போதும். இனியும் அவசர கோலத்தில் அவர் எதையும் செய்யாமல் இருப்பதே நல்லது. சிபிஐயால் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை. காரணம் அவற்றை  மமதா பானர்ஜி அரசு அழித்து விட்டது. அப்போது இருந்த போலீஸ் கமிஷனரும் மற்றவர்களும்தான் இதற்குக் காரணம். இதனால்தான் சிபிஐயால் வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் போய் விட்டது என்று அவர் குமுறலுடன் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!

news

2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்

news

வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!

news

வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

news

2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்