Leo Success Meet: நமக்கு பெரிய வேலை இருக்கு நண்பா.. ரசிகர்களுக்கு விஜய் மாஸ் அழைப்பு!

Nov 01, 2023,10:45 PM IST
சென்னை: ரசிகர்களாகிய நீங்கள் கொஞ்ச நாளா ரொம்ப கோபமா இருக்கீங்க. அதையெல்லாம் விடுங்க நண்பா. நமக்கு பெரிய வேலை இருக்கு என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வரப் போவதை அவர் சூசகமாக சுட்டிக் காட்டியுள்ளார் விஜய் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

லியோ வெற்றி விழா சென்னையில் இன்று கோலாகலமாக ட்தது. அதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசினார். அவரது பேச்சிலிருந்து:



இவ்வளவு நாள் நான்தான் என் நெஞ்சுக்குள்ள உங்களை வச்சிருக்கேன்னு நினைச்சேன். இப்பத்தான் புரியுது நீங்க உங்களோட இதயத்துல எனக்கு பெரிய இடம் கொடுத்திருக்கீங்கன்னு. என் தோலை செருப்பா தச்சா கூட உங்க அன்புக்கு ஈடாகாது. இதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. ஒன்னு செய்யலாம்..  நா உங்களுக்கு உண்மையா இருப்பேன். 

கொஞ்ச நாளா பார்க்கிறேன்..சோஷியல் மீடியால கோபமா இருக்கீங்க. ஏன் சோஷியல் மீடியால கோபம் ஜாஸ்தியா இருக்கு. நமக்கு அது வேலை இல்லை. நமக்கு பெரிய வேலை இருக்கு. நம்மாள எதை ஈஸியா ஜெயிக்க  முடியுமோ அது வெற்றி இல்லை.  எது முடியாதோ அதை பண்ணனும்.. அதுதான் வெற்றி. முயற்சித்து பண்ணனும். பெரிதினும் பெரிது கேள். ஆசை படணும்.. அதுல என்ன தப்பு. சின்னதா எய்ம் பண்ணாதான் தப்பு. பெருசா எய்ம் பண்ணுங்க.

ஒரு குட்டிக் கதை..  ஒரு நாள் 2 பேரு காட்டுக்கு வேட்டைக்குப் போனாங்களாம். அந்த காட்டுல சிங்கம், புலி, காக்கா, கழுகு நிறைய இருந்துச்சாம்.. காடுன்னா இதெல்லாம் இருக்கும்ல. ஒரு வேட்டைக்காரன் முயலுக்கு குறி வச்சான். இன்னொருத்தன் யானைக்கு குறி வச்சான். முயலுக்கு குறி வச்சவனுக்கு அது கிடைச்சுச்சு. இன்னொருத்தன் வெறுங்கையோட வந்தான். எனக்கு 2வது வேட்டைக்காரனைத்தான் பிடிச்சிருக்கு.. ஏன்னா அவன் பெருசா எய்ம் பண்ணான். பெருசா எய்ம் பண்ணனும்.

ஒரு தடவை ஏவிஎம் சரவணன் சார், டிராபிக் சிக்னல்ல ஒரு பாட்டிக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கார். அதை வாங்கிய பாட்டி, நல்லா இருப்பா எம்ஜிஆர்னு வாழ்த்திருக்காங்க. அந்தக் காலத்துல, யாராவது ஏழைகளுக்கு உதவி செஞ்சா அவரை எம்ஜிஆர்னுதான் நினைப்பாங்க. எதிர்காலத்தில் இதேபோல உதவி செய்றவங்களா நம்ம பசங்க இருப்பாங்க.

புரட்சித் தலைவர்னா ஒருத்தர்தான்.. நடிகர் திலகம்னா ஒருத்தர்தான்.. சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர்தான்.. உலகநாயகன்னா ஒருத்தர்தான்.. புரட்சிக் கலைஞர்னா ஒருத்தர்தான்.. தலன்னா ஒருத்தர்தான்.. மக்கள்தான் மன்னர்கள்.. நா தளபதி.. தளபதின்னா என்னன்னு தெரியும்.. நீங்க ஆணையிடுங்க. நான் செஞ்சுட்டு போறேன் என்றார் விஜய்.

விஜய்யின் பேச்சு ரசிகர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாரையும் தாழ்த்தாமல் யாரையும் விமர்சிக்காமல், மிக மிக நாகரீகமாக அட்டகாசமாக விஜய் பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்