- மஞ்சுளா தேவி
சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ பட வெற்றி விழாவை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே சென்னை நேரு உள் அரங்கில் நடைபெற இருந்த லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதில் அரசியல் காரணம் இருக்குமோ என பல கேள்விகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தன.
இருப்பினும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் பல தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இருப்பினும், லியோ படம் முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட ரூ. 461 கோடி வசூலில் சாதனை படைத்தது.
இந்த நிலையில், தற்போது படத்தின் வெற்றி விழாவை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் தரப்பில் காவல்துறையினரிடம் கோரிக்கை விவிடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று காவல் துறையினர் படக்குழுவினருக்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தனர். அதில் வெற்றி விழா எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும்.. யார் யார்? கலந்து கொள்கிறார்கள்.. பாதுகாப்பிற்கு தனியார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா.. எத்தனை டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் 5000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
இந்நிலையில் லியோ பட வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நேரு விளையாட்டு உள் அரங்கில் வேறு எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. விழா நடத்த முறையாக என். ஒ. சி கடிதம் பெற்று, தொகை செலுத்தினால் லியோ பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்கப்படும். நேரு விளையாட்டு உள் அரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன. இதில் பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகள்,
விஐபிகளுக்கு 500 இருக்கைகள் என மொத்தம் 6000 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ வெற்றி விழாவுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்