லியோ வெற்றி விழா.. போலீஸ் பச்சைக் கொடி காட்டியது.. என்ன நண்பா நண்பிகளே ரெடியா?

Oct 30, 2023,12:25 PM IST


- மஞ்சுளா தேவி


சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ பட வெற்றி விழாவை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஏற்கனவே சென்னை நேரு உள் அரங்கில் நடைபெற இருந்த லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு கடைசி நேரத்தில்   ரத்து செய்யப்பட்டது. இதில் அரசியல் காரணம் இருக்குமோ என பல கேள்விகள் எழுந்தன.  அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தன.


இருப்பினும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் பல தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இருப்பினும், லியோ படம் முதல் வாரத்திலேயே  கிட்டத்தட்ட ரூ. 461 கோடி வசூலில் சாதனை படைத்தது. 




இந்த நிலையில், தற்போது படத்தின் வெற்றி விழாவை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் தரப்பில் காவல்துறையினரிடம் கோரிக்கை விவிடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று காவல் துறையினர் படக்குழுவினருக்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தனர். அதில் வெற்றி விழா  எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும்.. யார் யார்? கலந்து கொள்கிறார்கள்.. பாதுகாப்பிற்கு தனியார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா.. எத்தனை டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் 5000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.


இந்நிலையில் லியோ பட வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நேரு விளையாட்டு உள் அரங்கில் வேறு எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. விழா நடத்த முறையாக என். ஒ. சி கடிதம் பெற்று, தொகை செலுத்தினால் லியோ பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்கப்படும். நேரு விளையாட்டு உள் அரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன. இதில் பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகள்,

விஐபிகளுக்கு 500 இருக்கைகள் என மொத்தம் 6000 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


லியோ வெற்றி விழாவுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்