- மஞ்சுளா தேவி
சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ பட வெற்றி விழாவை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே சென்னை நேரு உள் அரங்கில் நடைபெற இருந்த லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதில் அரசியல் காரணம் இருக்குமோ என பல கேள்விகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தன.
இருப்பினும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் பல தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இருப்பினும், லியோ படம் முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட ரூ. 461 கோடி வசூலில் சாதனை படைத்தது.
இந்த நிலையில், தற்போது படத்தின் வெற்றி விழாவை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் தரப்பில் காவல்துறையினரிடம் கோரிக்கை விவிடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று காவல் துறையினர் படக்குழுவினருக்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தனர். அதில் வெற்றி விழா எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும்.. யார் யார்? கலந்து கொள்கிறார்கள்.. பாதுகாப்பிற்கு தனியார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா.. எத்தனை டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் 5000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
இந்நிலையில் லியோ பட வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நேரு விளையாட்டு உள் அரங்கில் வேறு எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. விழா நடத்த முறையாக என். ஒ. சி கடிதம் பெற்று, தொகை செலுத்தினால் லியோ பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்கப்படும். நேரு விளையாட்டு உள் அரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன. இதில் பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகள்,
விஐபிகளுக்கு 500 இருக்கைகள் என மொத்தம் 6000 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ வெற்றி விழாவுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
பாமகவில் எனக்கே அதிகாரம்.... என்னை சந்தித்த நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்: டாக்டர் ராமதாஸ்
தொடர் கனமழை... வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு!
விஜய்யின் அரசியல் சூறாவளி சுற்றுப்பயணம்...ஆகஸ்ட் 15ல் துவக்கம்?
ஆனி மாத ஆசாட அமாவாசை.. மிகச் சிறப்பானது.. மிகவும் முக்கியமானதும் கூட!
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து விமர்சனம்.. ஆ ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
ரயில் கட்டண உயர்வு செய்தி.. மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
Axiom4: விண்வெளியில் புது வரலாறு எழுதும் இந்தியா.. ISS நிலையத்திற்குப் பயணமானார் சுபான்ஷு சுக்லா
மூன்றாவது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
மாநாடு நகரமாகிறது மதுரை.. முருகனைத் தொடர்ந்து ஆடு மாடுகளுக்காக ஒரு மாநாடு!
{{comments.comment}}