செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது... விஜய பிரபாகரன் ஷாக் பேச்சு!

Sep 27, 2024,04:11 PM IST

சென்னை:   செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது கொள்ளையர் கையில் சாவியை கொடுப்பது போல என்று விஜய பிரபாகரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும் ஏற்கவில்லை. இதனால் ஜாமின் கிடைக்காமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார் செந்தில் பாலாஜி.




இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டது. அதன்படி தினசரி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2 நபர் உத்தரவாதத்தின்பேரில் செந்தில் பாலாஜி ஜாமின் பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது. 


செந்தில் பாலாஜி நிபந்தனையில் வெளியில் வந்துள்ளதைக் கொண்டாடும் திமுகவை முன்னாள் ஆளுனர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது  தேமுதிக கட்சியை சேர்ந்த விஜய பிரபாகரனும் இதை விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தா ஜெயிலுக்கு போனார். தப்பு செய்து தான் ஜெயிலுக்கு போனார். 


100க்கணக்கான பெயில் மனுக்களைத் தாண்டி இன்றைக்கு தான் அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாது. செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது கொள்ளையர் கையில் சாவியை கொடுப்பது போல. திமுக அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள் என்றால், அவர்களுக்குள் ஏதோ ஒரு டீலிங் உள்ளது போன்று தான் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்