செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது... விஜய பிரபாகரன் ஷாக் பேச்சு!

Sep 27, 2024,04:11 PM IST

சென்னை:   செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது கொள்ளையர் கையில் சாவியை கொடுப்பது போல என்று விஜய பிரபாகரன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும் ஏற்கவில்லை. இதனால் ஜாமின் கிடைக்காமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார் செந்தில் பாலாஜி.




இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டது. அதன்படி தினசரி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2 நபர் உத்தரவாதத்தின்பேரில் செந்தில் பாலாஜி ஜாமின் பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது. 


செந்தில் பாலாஜி நிபந்தனையில் வெளியில் வந்துள்ளதைக் கொண்டாடும் திமுகவை முன்னாள் ஆளுனர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது  தேமுதிக கட்சியை சேர்ந்த விஜய பிரபாகரனும் இதை விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தா ஜெயிலுக்கு போனார். தப்பு செய்து தான் ஜெயிலுக்கு போனார். 


100க்கணக்கான பெயில் மனுக்களைத் தாண்டி இன்றைக்கு தான் அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாது. செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது கொள்ளையர் கையில் சாவியை கொடுப்பது போல. திமுக அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள் என்றால், அவர்களுக்குள் ஏதோ ஒரு டீலிங் உள்ளது போன்று தான் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்