விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி. அன்புமணியை அவர் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
20 சுற்றுகள் முடிவில், திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகளைப் பெற்று பிரமாண்ட வெற்றியை பெற்றார். பாமக வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றனர். திமுக விக்கிரவாண்டியில் இதுவரை 1 லட்சம் வாக்குகளைப் பெற்றதில்லை. முதல்முறையாக அந்த இலக்கைத் தொட்டுள்ளது. அந்த வகையில் இது திமுகவுக்கு பிரமாண்டமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் பாமக வேட்பாளர் அன்புமணி தொகையை தக்க வைக்கத் தேவையான வாக்குகளைப் பெற்று விட்டதால், அவருக்கு டெபாசிட் தொகை மீண்டும் கிடைக்கும். அதேசமயம், கடந்த 2021 தேர்தலை விட சற்று கூடுதலான வாக்குகளையும் பாமக பெற்றுள்ளது அந்தக் கட்சிக்கு சற்றே ஆறுதலான விஷயம்.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றி வித்தியாசம் 9573 ஆக மட்டுமே இருந்தது. இந்தத் தேர்தலில் அதை விட பல மடங்கு அதிகமான வித்தியாசத்தில் திமுக பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் 8216 ஆகும். இந்த முறை அதை விட கூடுதலான வாக்குகளை அது பெற்றுள்ளது. இருப்பினும் பெரிய தாக்கத்தை நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலிலும் ஏற்படுத்தத் தவறி விட்டது. அக்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கவில்லை.
முன்னதாக விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. 29 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}