சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனலின் தாத்தாவுக்கு உடம்புக்கு முடியவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"இன்னைக்கு ஒரு புடி" இந்த வார்த்தையை யாரும் மறந்திருக்க முடியாது. வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவின் குரல் தான் இது. இந்த குரலும் இந்த டீமும் செய்யும் சமையலும் அவர்கள் போடும் வீடியோக்களும் மிக பிரபலமானவை. உலகத் தமிழர்கள் அத்தனை பேரையும் மயக்கிய சமையல் குழு இந்த youtube வில்லேஜ் குக்கிங் சேனல்.

கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், கரூர் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோதிமணியின் முயற்சியால் ராகுல் காந்தி இந்தக் குழுவினருடன் கலந்து கொண்டு சமையலில் கலந்து கொண்டு அசத்தினார். இந்த குழுவை சேர்ந்த தாத்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதாவது இதயக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்த குழுவை சேர்ந்த சுப்ரமணியன் வேலுச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், தாத்தா இருதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்து விட்டு, தாத்தாவுக்கு என்னாச்சு என்று மக்கள் பதறிப் போய் விசாரித்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர் அருமையான முறையில் குணமடைந்து வருவது போன்ற ஒரு புகைப்படத்தையும் சுப்பிரமணியன் வேலுச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தாத்தாவுக்கு பலரும் வாழ்த்து கூறுகின்றனர். சீக்கிரம் ஜம்முனு எழுந்து வாங்க இன்னைக்கு ஒரு புடி அப்படிங்கற அந்த குரலுக்காக காத்துட்டு இருக்கோம் அப்படின்னு சொல்லி எல்லா பேருமே வந்து சந்தோஷமா தாத்தா வாழ்த்திட்டு இருக்காங்க.
நாமளும் தாத்தா விரைவில் நல்ல குணமடைந்து மறுபடியும் செம்மையாக சமையலில் குதிக்க வேண்டும், விதம் விதமாக சமைத்து மக்களுக்குப் பரிமாற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வோம்.
ஒரு சிறிய நிலநடுக்கம்
Life means ...Living I dealistic F ocussing E motions
துளிர்த்தது மரத்தின் அடி தண்டு மட்டுமல்ல....!
சந்தேகம் எனும் வித்து
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
மனைவி என்கிற மாண்புமிகு மேடத்திற்கு!
வாழ்வியல் தத்துவம்.. வார்த்தைகள் மனிதரைக் கவரும். இரக்கம் ஒன்றே கடவுளைக் கவரும்!
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஒத்தசடை போட்டு ஒரு ரோஜா காதோரம்!
{{comments.comment}}