ஹரியானா சட்டசபைத் தேர்தல்.. ஜூலானா தொகுதியில்.. வினேஷ் போகட் வேட்பு மனு தாக்கல்

Sep 11, 2024,05:48 PM IST

சண்டிகர்: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் பேட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.


ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது.  அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஹரியானாவில் கடந்த 10 வருடமாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பதால் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. வேட்பாளர்களை தெளிவாக தேர்வு செய்து நிறுத்தியுள்ளது.




கூட்டணி அமைக்கவும் காங்கிரஸ் முன்றது. ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. இதனால் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுகின்றன. பாஜகவுக்கு எதிராக டெல்லியில் போராடிய மல்யுத்த  வீரர்களையும் தேர்தல் களத்தில் காங்கிரஸ் களம் இறக்குகியது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.சி வேணுகோபால் முன்னிலையில், பஜ்ரங் புனியா மற்றும் போகத் இருவரும் இணைந்தனர்.


தற்போது  வினேஷ் போகத் ஹரியானா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். 31 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். அதில் ஜூலானா பேரவைத் தொகுதியில் வினேஷ் போகத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்